மழைக்காதலர்கள்
- - - - - - - - -
குளிரில் நடுங்கும் மர உருக்கள்
காற்றின் ரூபத்தை காதலிக்கத்தொடங்கின
அந்நாளில் ஒழுகிய வான்தூதுவர்கள்
தேவதைகளின் கரங்களில் இருந்து
ஆயுள்ரேகைகளை வாங்கிக்கொண்டு
மலைமுகடுகளில் முத்தமாய் வழிந்தோடுகின்றனர்
நிலம் பேசும் வான்துளிகளில்
மூதாதையர்களின் அழுகை
மழைத்துளியில் நனைகிற பழங்குடியின் குடில்களால்
நூற்றாண்டுகால ரகசியம் கமல்கிறது
காட்டின்மகள் நீராடுகிற தாமரைக்குளக்கரையில்
தவளைகள் இன்பமுறுகின்றன
தேவர்களின் எச்சிலால் ஒழுகிய வானம்
வனதெய்வத்தை நனைக்கிறது,
யுக ஆண்டுகளாய் இமைமூடியிருந்த கடவுள்
ஈரத்தழுவலால் ஒளி வீசுகிறார்
மழையில் மூழ்குகிற மரப்பாச்சி தேகமொன்று
காட்டுயிர்களின் காதுகளில்
காதல்சொல்லி பிரிகிறது .....
- அதிரூபன்
No comments:
Post a Comment