tag:blogger.com,1999:blog-15880976352421617372024-03-04T21:22:29.436-08:00இலக்கியன் விவேக்Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-26413551596533663212016-07-08T17:45:00.001-07:002016-07-08T17:46:42.594-07:00மிழினாவின் புராதனக்குடில்<p dir="ltr"><br>
மிழினாவின் புராதனக்குடில்</p>
<p dir="ltr">- - - - - - - - </p>
<p dir="ltr">காடுபேறு கொண்டவளின் மனம் திவ்யமாய் இசைத்துக்கிடக்கிறது. மனம் காணாத வெளியில் வாழ்வை நகற்றுவதில் ஆழமாய் இருக்கிறாள் மிழினா.  மரங்களும் இலைகளும் பேசும் நிஜத்தை தன் காதுகள் இரவல் வாங்கிக்கொள்ளுமென தனக்குள் ஓயாது எழுதிக்கொண்டிருக்கிறாள். தன் ரகசியங்களை வானில் பறக்கவிடுகிற பட்டாம்பூச்சி மனம் அவளுக்கானது.</p>
<p dir="ltr">காட்டில் தொலைந்துபோகிற சுகம் வாழ்நாளின் அதிஉண்ணத தருணமென எண்ணுகிறவள், ஒருநாள் கண்கள்நிறைய காட்டுக்கனவுகளோடு அடர்ந்த மரங்களின் நடுவே புதிய மனிதத் தடம் பதித்து காடு நுழைகிறாள். </p>
<p dir="ltr">காட்டுவாசம் மனதை குளிர்விப்பதாய் உணருகிறவள், உயிர்களுக்கான பொதுவெளியில் தன் கனவுகளை திறந்து காடு பார்க்கிறாள். நிலமெங்கும் ஊறும் பச்சையத்தோலில் தன் கண்களை இறக்கி தாவரங்களின் மடியில் முகம் வைத்து வாசம் உண்கிறாள் .</p>
<p dir="ltr">மனம் உணராத பெருவெளியின் மகிழ்வுகளுக்கு உயிருள்ளதாய் எண்ணி மகிழ்கிறாள். பெருத்த மரத்தின் உடலை யானையை வருடுவதுபோலென்னி தொட்டுப்பார்த்து இக்கணத்தின் மனதை காடாக்கி மகிழ்கிறாள்.</p>
<p dir="ltr">இலைகளில் பட்டுத் தெரிக்கும் ஒளியில் முகம் நுழைத்து வண்ணமாகிறாள்.<br>
அகத்தை கண்ணாடியாக்கி தன் ஒளிமுகத்தை நினைத்து பார்த்து தூய ஒளியில் முகம் நனைத்ததை எண்ணி ஓலமிடுகிறாள்.</p>
<p dir="ltr">மிருகங்களால் கொள்ளப்படுவோம் என்பதன் பயம் துளியும் இல்லை. இறத்தலை காட்டுக்குள் துறப்பது வாழ்வின் பூரணமென பேசுகிற மனசு அவளை பாதுகாக்கிறது.<br>
நிலம் அதிரும் வேர்களின் வாசம் நிலத்திற்குமேலே வீசத்தொடங்குகிறது. மனிதவாசம் கழிவுற்றதாய் எண்ணுகிறாள் மிழினா.</p>
<p dir="ltr">இலையில்லாத வெளியில் தன் உடலை நகர்த்தி நடந்துபோகிய், எப்போதும் குளித்துக்கொண்டே இருக்கும் அருவி நீரள்ளி குரல் நனைக்கிறாள். உயிருக்குள் இறங்கும் சுவையை வாய்நிறைய பருகு இன்னும் யாரிடமும் பேசாத அகமொழியில் பாட்டுபாடிக்கொண்டு மலையில் பயணிக்கிறாள். </p>
<p dir="ltr">குரங்குகளும் குருவிகளும் மனித சப்தத்தால் கலவரம் அடைகின்றன.<br>
தன் குடிலுக்குள் நாகம் நுழைவதுபோலான பயத்தை இந்த பறவைகளுக்கு ஏற்படுத்திவிட்டதென்னி வருந்துகிறாள். </p>
<p dir="ltr">வயிற்றின் பசியை உணர்ந்து மலைவாழை பழங்கள் உண்டு குடல் நிறைக்கிறாள்.<br>
திசைகள் அறியாத பக்கங்களில் இருந்து புதுப்புது ஒலிகள். அனைத்தும் காட்டின் இசை. இந்தகணத்திலான இசைவெளியில் உயிர்துறப்பது வாழ்வின் பூரணமென ஒரு குரல் அவளுக்குள் பேசுகிறது. </p>
<p dir="ltr">காட்டின் அந்திப்பொழுது இரவின் முகத்தை காட்டி இருள்கிறது. இருள்முகம் காண இரவுக்குள் விழிகள் நீட்டி புலப்படாத பிம்பத்தில் அதிர்வுறுகிறாள். காட்டின் பயம் உயிர்பற்றியதல்ல என்பதில் தெளிவாய் இருக்கிறாள். <br>
காட்டின் வயது பேசும் ஒருமரத்தின் அடியில் உடல் சாய்த்து உறங்குகிறாள். </p>
<p dir="ltr">காட்டுக்கனவுகளோடு காட்டுக்குள் உறங்கும் சுகம் உயிரின் இன்பம். சருகுகளை அணிந்துகொண்டு உறங்கியவளின் காடு கொஞ்சமாய் ஒளி வீசுகிறது. விடியலின் முகம் புதிதாய் இருக்கிறது. கனவுகளை உதறிக்கொண்டு கண்களை  திறந்து புதியவெளி பார்க்கிறாள். </p>
<p dir="ltr">காலைவனம் கேட்டிராத சப்தத்திலிருந்து பிறக்கிறது. இன்று காணப்போகும் உலகம் நேற்றிலிருந்து பிறந்ததில்லை என்கிற மனதோடு புதிய ஒளியை காட்டுக்குள் வீசத்தொடங்கினாள். </p>
<p dir="ltr">காற்று பேசும் மரங்களின் நிழலில் தன் புலன்களை உயிர்பித்து காடுதோறும் விளைந்த கனவின் ரகசியத்தை காற்றோடு பேசி நகர்கிறாள். </p>
<p dir="ltr">வாழ்தலுக்கான அகக்காரணங்கள் காட்டில் பிறந்தவை. இங்கு வீசும் காற்றும் வாசமும் உயிரின் ஆயுள். புராதன நிலத்தில் வாழும் தற்கணம் தன் மனதுக்குள் புதிதாய் காடுபார்க்கிறாள். </p>
<p dir="ltr">தாவரங்கள் கடிக்கப்பட்டிருக்கின்றன. பழங்களின் விதைகள் திசைகள்தோறும் சிதறிக்கிடக்கிறது. மனிதன் அல்லாத வேறுஉயிரின் தடம் தன் நிழலுக்கருகில் மறைந்து செல்வதை காண்கிறாள். தன் மிரண்ட கண்களுக்குள் நகரும் மிருகம் எதிரில் ஒரு உடலைத் கடித்துக்கொண்டு நடந்துபோகிறது. எதிரில் நகரும் பயம் இவளை ஒன்றும்செய்யவில்லை. காட்டுயிர் ஆகிவிட்டோம் என்று நினைத்து மகிழ்கிறாள். </p>
<p dir="ltr">நெரிசல்கள் குறைந்த இடத்தில் பாறையொன்றின் மேலேறி தன் மகிழ்வினை காடு நிரப்புகிறாள். உயிர் விரும்பும் இடம் இந்தகாட்டின் எல்லா நி<u>ழ</u>லிலும் இருக்கிறது. </p>
<p dir="ltr">கண்கள் விரிகிற வெளியில் தன்னை துரத்திக்கொண்டு ஓடுகிற மனதின் ஆசையில் கண்டிராத வெளியறிந்து உயிர்மகிழ அழுகிறாள் மிழினா .</p>
<p dir="ltr">மரங்களின் நடுவே தன் உயிரை தொலைக்கிற மனம் இப்போது அவள்கணம் ஆனது. காட்டை அருந்தி காட்டை விழுங்கி காட்டை மென்று காட்டுக்குள் மறிக்கிறாள் . </p>
<p dir="ltr">இப்போது அவளின் உயிர்குடித்து வளர்ந்த மரமொன்றில் பறவை கூடுகட்டுகிறது. <br>
ஓடுகள் உடைத்து உடல் நீட்டிய குஞ்சுகளின் முகமொன்றில் மிழினாவின் முகத்தை காடுபார்க்கிறது. பழையநினைவில் ஊறிய காடு இந்தப்பிஞ்சுப் பறவையின் விழிகளில் நெழிகிறது.</p>
<p dir="ltr">பறவையின் முகம்வாங்கி மீண்டும் காடு நுழைகிறாள் மிழினா . <br>
காடு பார்க்கிறாள் காடு சுவைக்கிறாள் காடாய் கனல்கிறாள்....</p>
<p dir="ltr">- அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-56422696021234812082016-07-08T17:43:00.001-07:002016-07-08T17:43:05.654-07:00மழைக்காதலர்கள்<p dir="ltr">மழைக்காதலர்கள்</p>
<p dir="ltr">- - - - - - - - -</p>
<p dir="ltr">குளிரில் நடுங்கும் மர உருக்கள்<br>
காற்றின் ரூபத்தை காதலிக்கத்தொடங்கின</p>
<p dir="ltr">அந்நாளில் ஒழுகிய வான்தூதுவர்கள்<br>
தேவதைகளின் கரங்களில் இருந்து<br>
ஆயுள்ரேகைகளை வாங்கிக்கொண்டு<br>
மலைமுகடுகளில் முத்தமாய் வழிந்தோடுகின்றனர்</p>
<p dir="ltr">நிலம் பேசும் வான்துளிகளில்<br>
மூதாதையர்களின் அழுகை</p>
<p dir="ltr">மழைத்துளியில் நனைகிற பழங்குடியின் குடில்களால்<br>
நூற்றாண்டுகால ரகசியம் கமல்கிறது</p>
<p dir="ltr">காட்டின்மகள் நீராடுகிற தாமரைக்குளக்கரையில்<br>
தவளைகள் இன்பமுறுகின்றன</p>
<p dir="ltr">தேவர்களின் எச்சிலால் ஒழுகிய வானம்<br>
வனதெய்வத்தை நனைக்கிறது,<br>
யுக ஆண்டுகளாய் இமைமூடியிருந்த கடவுள்<br>
ஈரத்தழுவலால் ஒளி வீசுகிறார்</p>
<p dir="ltr">மழையில் மூழ்குகிற மரப்பாச்சி தேகமொன்று<br>
காட்டுயிர்களின் காதுகளில்<br>
காதல்சொல்லி பிரிகிறது .....</p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-20469214905668428432016-07-08T17:41:00.001-07:002016-07-08T17:41:52.056-07:00ஆதித்தன்மையின் குடில்<p dir="ltr">ஆதித்தன்மையின் குடில்</p>
<p dir="ltr">- - - - - - - - - - -</p>
<p dir="ltr">மறக்க நினைக்கிற கணங்களின்மீது தூரிகை வரைந்து செல்கிறான் பூபாலன். வண்ணங்கள் சிதறிய பெருவெளியிலிருந்து தனக்கான கணத்தை கவிதையாக்கி மகிழ்கிறான். ஆதிக்குறிப்புகள் மீது படிந்த புதியபார்வை தற்கணத்தின் சாயலை எழுதச்சொல்கிறது. தன் கண்ணீரை அதிஉண்ணத இசைக்கருவியென வாசித்துக்கொண்டிருக்கிறவனின் இரவு தான் பூபாலனின் கவிதை. தான் பயணிக்கிற வெளியிலிருந்து கணம்ஊறி மனம் தேக்கிவைத்த ஆசைகளின் மீதும், புலன்விரும்புகிற காட்சிகளில் மீட்கமுடியாத ரகசியத்தின் மீதுமே தன் தனிமையை செலவழிக்கிறான்.</p>
<p dir="ltr">பிரபஞ்சத்தின் முகத்தை யூகிக்கநினைக்கிறவனின் மனம், இப்போது அழிந்த சாம்பல்கின்னத்தில் நிறைந்துகிடக்கிறது. உலகத்திற்கே ஒருமுகம் அது ஆதிமுகம். இந்தமுகத்தின் பிரதிகள் தான் அன்புசெழுத்துபவையும் எறித்து புதைப்பவையும்.</p>
<p dir="ltr">தன்நிலையை கவிதையாக்குகிற போதும் பிறவலியை மையப்படுத்தும்போதும் தன் ஆதிமுகத்தின் மீது படர்ந்திருந்த பெருங்காலத்தை தடவிப்பார்க்கிறான் பூபாலன். </p>
<p dir="ltr">சிநேகிக்கிற மனம் இவனுக்குள் எப்பொழுதுமாய் இருக்கிறது. உடைந்து சிதறிய சோப்புகுமிழ்களால் புன்னகையைத் தொலைத்தேன் என சொல்லும்போது இவன் மனம் நமக்கு புலப்படுகிறது. மனதின் தேடலுக்குள் நிறைந்திருக்கிற அகப்பார்வை இவனை கவிதை எழுதவைத்திருக்கிறது. உயிர் பேசநினைக்கிற புதிதில் தன் குழந்தைமுகத்தை நிறுத்தியிருக்கிறான். இவனால் ஆன பிரபஞ்சம் குழந்தைகளால் ஆனது. இவன் கவிதைகளில் திரியும் குழந்தைகள் வானவில்லானவை. அவைகளின் காதுகளில் பிங்க் நிறத்தின் ரகசியம் சொல்லி மறைகிறவனின் தடங்கள் தான் பூபாலனின் கவிதை.</p>
<p dir="ltr">கவிதைகளுக்குள் அலைகிற வண்ணங்கள் ப்ரத்யேகமானவை. அவைகள் பிறக்கிற தருணங்களில் தூரிகைசூட்டில் நனையவிரும்புகிற மனம்தான் வாசக எண்ணம். </p>
<p dir="ltr">அமுங்கிய அடிவயிற்றை அவள் தடவிக் கொண்டிருக்கும் நேரம்....... இந்தவரி எதனால் ஆனது. மனம் பேச மறுக்கிறது. உயிர் உறைந்த இடத்திலிருந்து தேடுகிறேன். ஆழ்மனவீரியமிக்க ஜீவிகள் சிகரைட் சாம்பலில் கரைக்க நினைக்கிற தருணமென சொல்கிறான் பூபாலன். </p>
<p dir="ltr">காலகாலமாய் பெண்களுக்கு நடந்துவரும் இழிச்செயல்கள். எழுதிப் பயன்படாத பக்கத்தில் அழுகையை மட்டுமே நிரப்பமுடிகிறது. மனிதமிருகங்களின் தடங்கள் காமம் பிடித்தவை. எதிர்பாலினத்தை பறிக்க நினைக்கிற மனிதச்செயல், இழிந்தவினைக்குள் நுழையச்சொல்லுகிற மனிதமனம் எவ்வளவு கலவரமானது..</p>
<p dir="ltr">"" உயிரும் உடலும் சேர்ந்து வழங்கியும்<br>
உயிரை வெறுத்து உடலை விரும்புகிற ஆண்களின் இழிந்த வினை " ( க.வை. பழனிச்சாமியின் மீண்டும் ஆதியாகி நாவலின் ஒரு வரி இது )<br>
- எவ்வளவு உண்மை நிறைந்தது இது.</p>
<p dir="ltr">உரக்க பேசுகிற என்போன்ற குரல்களால் பிரபஞ்சத்தின் காதுகள் செவிடாகின்றது.<br>
மனிதமொழி பேசுகிற நாக்கைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன், எனக்குள்ளும் என்வெளியிலும்.</p>
<p dir="ltr">பூபாலின் கவிதைகள் குழந்தைகளுக்கான முகம் கடவுளுக்கான அகம் மிருகங்களுக்கான அகம்புறம் நிறைந்தவை. கவிதைக்குள் தொலைந்துவிடுகிற சௌகர்யம் எனக்கு பிடித்தவையே அண்ணா....</p>
<p dir="ltr">- அதிரூபன்.</p>
<p dir="ltr">ஆதிமுகத்தின் காலப்பிரதி<br>
ஆசிரியர் இரா.பூபாலன்<br>
பொள்ளாச்சி இலக்கியவட்டம் வெளியீடு<br>
விலை.70<br>
</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-31151102662865423072016-06-29T05:45:00.001-07:002016-06-29T05:45:13.736-07:00மரணத்தை புசித்து<p dir="ltr">மரணத்தை புசித்து</p>
<p dir="ltr">- - - - - - - - - -</p>
<p dir="ltr">தானிய நிலங்களில்<br>
ஈரம் வற்றிப்போயிருந்தன</p>
<p dir="ltr">பசியின் வயிறுகளில் விழுந்த பள்ளங்களில்<br>
சூரியன் உதித்தெரிக்கிறது</p>
<p dir="ltr">தாகத்தின் நரம்புகளை துளையிட்ட கதிர்கள்<br>
மரணத்தின் மேனியை படுக்கையாக்கின</p>
<p dir="ltr">இறையை நம்பியிருக்கிற உயிர்கள்<br>
அறுவடைகாலங்களில் பிணங்களை நடுகின்றது</p>
<p dir="ltr">இளவெயிலின் தாகம்<br>
ஆறாமறிவுக்கடலை உறிஞ்சி<br>
நெருப்பை உமிழ்கிறது</p>
<p dir="ltr">உயிர் கேட்கிற உணவு<br>
இந்த நிலத்தின்<br>
மனிதக்கழிவோடு அழிந்துபோனது</p>
<p dir="ltr">இறையான்மையின் கருணை<br>
பிறந்த குழந்தையின் பட்டினிச்சாவைப்போல்<br>
குப்பையில் கிடக்கிறது</p>
<p dir="ltr">உங்கள் நம்பிக்கைகள்<br>
மழைநேர விண்மீனைப்போல</p>
<p dir="ltr">எப்போதாவது,<br>
வானத்திலிருந்து<br>
விழுகிற உணவுப்பொட்டலங்களில்<br>
விஷம் இல்லையென்று நம்பிக்கை வைத்திருங்கள்</p>
<p dir="ltr">உங்கள் நிர்வாணங்களை<br>
மாறிமாறி புசித்து நிரம்பிய வயிறுகளை<br>
பசிக்கு பழக்கவேண்டாம்</p>
<p dir="ltr">நம்மைபோன்றவருக்கு<br>
மரணம் பழக்கப்பட்ட ஒன்று .... </p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-30875801319644888272016-06-29T05:43:00.001-07:002016-06-29T05:43:44.210-07:00தூளிக்குள் உறங்கும் காடு<p dir="ltr"><u>தூளிக்குள்</u> உறங்கும் காடு</p>
<p dir="ltr">- - - - - - - -</p>
<p dir="ltr">சூன்யதேசத்தின் ஆதிக்கிழவி <br>
இரவின் மையெடுத்து காடு வரைகிறாள்</p>
<p dir="ltr">நிலவின் நிழலில் ஆடும் தூளியொன்றில்<br>
ஈன்ற பிள்ளையின் அழுகையை தூங்கவைக்க<br>
காற்றுக்குள் குரல்நிரப்பி தாலாட்டுகிறாள்</p>
<p dir="ltr">வரைந்த காட்டுபூச்சிகளின் இரைச்சல்<br>
காட்டுக்குள் மங்களம் பாடின<br>
காற்றொலியில் தவழ்ந்த இசைபூச்சிகள்<br>
தாலாட்டோடு கலக்கிறது</p>
<p dir="ltr">வனமெங்கும் பரவும் வரைதூரிகை<br>
கிளையிடுக்கில் உதிர்ந்த சருகாகின<br>
சருகுதிரும் சப்தத்தில் சிதறிய காடு<br>
துயில்ந்த பிள்ளையின் கனவில் இசையாகிறது</p>
<p dir="ltr">புலன்நீட்டி நகர்கிற ஆமைக்குஞ்சுவின் பாதையில்<br>
இறந்த காடொன்றின் அச்சு.<br>
சாம்பல் மிதித்து நகரும் உடல்<br>
இசைக்காற்றில் குழலூதுகின்றன</p>
<p dir="ltr">ஆதிக்கிழவி வரைந்து சிதறிய மைத்துண்டுகளை<br>
பறவை அலகுக்குள் இடுக்குகிறது</p>
<p dir="ltr">காட்டோடும் இசையோடும் பறக்கும் பறவை<br>
நிலவின் நிழலில் ஆடும் தூளியில்<br>
துயிலும் பிள்ளையானது ..</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-49139896414391467972016-06-29T05:42:00.001-07:002016-06-29T05:42:29.091-07:00வனா<p dir="ltr">வனா</p>
<p dir="ltr">- - - - - - - - - - -</p>
<p dir="ltr">காட்டுநீரள்ளி குரல்நனைக்க<br>
தன்னை காற்றாக்கிக்கொண்டாள் வனா</p>
<p dir="ltr">காற்றுக்கு தேகம் பொருத்தி<br>
காட்டுயிராக்குகிறாள் குளிரை</p>
<p dir="ltr">பச்சையத்திசைகளை மேயும் மோகம்<br>
கூட்டுமரங்களின் உடலை அசைக்கிறது</p>
<p dir="ltr">காடு மலர்ந்து<br>
காடு உதிர<br>
வனத்தை கூந்தலில் பதுக்கி மகிழ்கிறாள்</p>
<p dir="ltr">நிலம் அதிர பெருகும் சப்தம்<br>
பெருங்கூடொன்றின்<br>
அலகில் இருந்து வழிகிறது</p>
<p dir="ltr">இலையில் இருந்து பெய்கிற<br>
உறைந்த மழையொன்று<br>
காட்டுக்குள் குளிர்நிரப்பி<br>
காற்றுக்குள் கூடுகிறது</p>
<p dir="ltr">குகைமிருகங்களின் கூடல்<br>
வெம்பாறையின் சூட்டில் நனைய<br>
வனா இதமாய் சூடுரசுகிறாள்</p>
<p dir="ltr">மலைஇருளில் அசைகிற பச்சையப்பூ<br>
பெருமழையுதிர்வில் நீர்நிறமாகி<br>
காட்டுநிழலை நனைக்கிறது</p>
<p dir="ltr">மழைபெய்யாப் பொழுதின் காடு<br>
வனாவின் தாகத்தில் உலர்கிறது</p>
<p dir="ltr">இசையென ஒழுகும் நீரருவிச்சப்தம்<br>
நீளவால்குருவியின் சிறகிலிருந்து தெரிக்க<br>
உதிர்ந்த நீரில் ஊறுகிறாள் வனா</p>
<p dir="ltr">நீரள்ளி குரல்நனைக்கிற நினைவு<br>
வனாந்திர வெளியில் காய்ந்துகிடக்கிறது</p>
<p dir="ltr">காடெல்லாம் நீந்தநினைக்கிற<br>
ஒருத்தியின் ஆசை<br>
காட்டுப்பூக்களில் பூத்திருக்கிறது</p>
<p dir="ltr">இப்பொழுது<br>
உயிர்களின் சப்தம்<br>
வனா வனா ! </p>
<p dir="ltr"> - அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-53427360578595393952016-06-14T05:45:00.001-07:002016-06-14T05:45:57.512-07:00வயிற்றில் உதிக்கும் சூரியன்<p dir="ltr">வயிற்றில் உதிக்கும் சூரியன்</p>
<p dir="ltr">- - - - - - - -</p>
<p dir="ltr">கடல்நீர் சுவைக்கிற நாக்கில்<br>
தாகம் ஊறக்கண்டேன்</p>
<p dir="ltr">சூடு மேல் பூசுகிறது</p>
<p dir="ltr">நிர்வாணமாக்குகிறது வெயில்</p>
<p dir="ltr">மணல்குகைக்குள் புதைந்திட எழும் எண்ணத்தை<br>
இந்த ஆதி நிர்ணயித்திருக்கிறது</p>
<p dir="ltr">நிலம் நீராகி தடங்கள் மூழ்கிய ஆழத்தில்<br>
உடலை அமிழ்த்த நினைக்கிறேன்</p>
<p dir="ltr">கண்களின் குளிரை<br>
பூமியில் இறக்கி<br>
அதன் இருளில் கொஞ்சமாய் வாழவேண்டும்</p>
<p dir="ltr">கள்ளிச்செடியின் காய்கள்<br>
சிறுகுடலின் பாதியிலும் நிரம்பவில்லை<br>
பசிக்கிறது</p>
<p dir="ltr">வெயிலை குடித்து ஒழுகுகிற வியர்வை<br>
பாலையின் ஒளியில் ஊற்றாகிறது</p>
<p dir="ltr">சிறுநீர் நனைத்த மணலை அள்ளி<br>
என் உடலில் நீர்த்திருக்கிற சூரியன்மேல் பூசுகிறேன்<br>
கடலில் மூழ்குகிற சூரியனுக்கு இந்தகுளிர் போதாமை தான்</p>
<p dir="ltr">கைகளை கால்களுக்கிடையில் கிடத்தி<br>
முழங்கால் தலைதொடும் நிலையில்<br>
சுருண்டு படுத்துக்கிடக்கிறேன்</p>
<p dir="ltr">ஒரு மிருகத்தின் நிழல்<br>
வெயிலை மறைத்து அருகில் நிற்கிறது </p>
<p dir="ltr">என் வயிறின் பள்ளத்தில் விழுந்த சூரியனை<br>
கொஞ்சமாய் கொஞ்சமாய் குருதியொழுக புசிக்கிறது<br>
என் அருகாமை மிருகம் ...</p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-77216574878654248902016-06-11T07:48:00.001-07:002016-06-11T07:48:57.896-07:00ஆகாசம் அருந்தி வாழும் நிலம்<p dir="ltr">ஆகாசம் அருந்தி வாழும் நிலம்</p>
<p dir="ltr">- - - - - - - -</p>
<p dir="ltr">காட்டின் வயதை பேசும் அடிமரம்<br>
இலைவிரிப்பில் முகம் பார்க்கும் ஆகாய தேகம்<br>
வனமெங்கிலும் அகம் நிருவும் உயிர்கள்<br>
வாழ்வின் காரணத்தை மீட்டுகின்றன</p>
<p dir="ltr">இருளேறாத நிலவின் கண்களில்<br>
ஒரு காடு பிறக்கிறதென கொள்வோம்</p>
<p dir="ltr">இறகு கூடொன்றில் குளிர் பூசுகிற நிலவு<br>
பறவையின் பிரசவத்தில் பாதிவலியை சுகந்தமாக்குகிறது</p>
<p dir="ltr">வயிற்பெருத்து கர்பத்தோடு அமர்கிற தட்டான் தோகைகள்<br>
தனிமையை மருத்துவத்திற்கு செலவாக்கும்</p>
<p dir="ltr">யானையின் காதுகள்<br>
தடித்த மரத்தின் நிழலை விசுறுகின்றன<br>
நிழலொதுங்கி வெய்யில் காய்ந்த நிலத்தில்<br>
யுகாந்திரத்தை மேய்கிறதொரு துதிக்கை</p>
<p dir="ltr">முறிந்த மரத்தின் பட்டைகளில்<br>
குடையென விரிகிறது காளான்பிஞ்சுகள்<br>
இறந்த மரத்தின் உயிர்குடித்து வளர்கின்றன<br>
குடைகாளான்கள்</p>
<p dir="ltr">காட்டில் பிறந்த பறவைகள்<br>
மனதசப்தத்தில் பறந்து செல்கின்றன</p>
<p dir="ltr">தனிமையின் நிழலில் <u>அமர்ந்து</u><br>
மலைமுகம் காண்கிற விழிகள்<br>
காட்டின் பூரணத்தில் அமிழ்ந்து சாவட்டும்</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-73885422788044666132016-06-11T02:40:00.001-07:002016-06-11T02:40:54.725-07:00ருசி ஒழுகிய பொழுதில்<p dir="ltr">@ ருசி ஒழுகிய பொழுதில் @</p>
<p dir="ltr">பரீக்குட்டியின்<br>
ப்ரணய ஜீவனின்<br>
கடைசி துடிப்பு நிகழ்வு<br>
ஒரு ஞாலத்தின் ஜென்மத்தை<br>
குருதி ஒழுக வைக்கிறது </p>
<p dir="ltr">அகிலத்தின் பசிக்காக<br>
ப்ரணய நாவின் சுவைக்காக<br>
குடுவை உயிரின் மீதிக்காக<br>
இச்ஜீவனின் கொலை<br>
அகப்புனிதமாகிறது .</p>
<p dir="ltr">புல் தோகைகளை அறைத்து<br>
கூழ் பழசு பல குடித்த,<br>
என் பின்புழுக்கைகளை சுமக்க<br>
இந்த விதிமண்டலத்தில் வழியில்லை .</p>
<p dir="ltr">ஏதோ ஒரு<br>
புனித தேகப்பெருமூச்சு ,<br>
என் பிந்தைய காலத்தில்<br>
இல்லாமல் போயிருந்தால்,<br>
நான் பிறவா பிறப்பே<br>
அம்சமாய் இருந்திருக்கும் .</p>
<p dir="ltr">அழகுச்சொப்பணம்<br>
அம்சப்பிரியம்<br>
ஆடித்திரிந்த ஸ்பரிசம்<br>
அசந்துபோன மரணக்களைப்பு<br>
இவையே,<br>
என் மரணத்திற்கு பிந்தைய மகிழ்வுகள் .</p>
<p dir="ltr">கருமை நிறைந்த என் சிறுநாக்கு<br>
புல் திண்று பழகிய வரலாறு<br>
இப்பேரண்டமே அனுமதித்த ஒன்று.</p>
<p dir="ltr">ஆட்டுக்குட்டியின் நாருசி<br>
இறைச்சியை மதித்திருந்தால்<br>
என்னவாயிருக்குமோ,<br>
சில ஜென்மத்தின் நிலை .</p>
<p dir="ltr">பாவம் ,<br>
பரீக்குட்டியின் ஆட்டுக்குட்டிக்கு<br>
நம்மைபோல்<br>
கொலை செய்யத்தெரியாது ..</p>
<p dir="ltr"> - அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-36461031391708033562016-05-26T18:58:00.001-07:002016-05-26T18:58:27.968-07:00ஆதித்தனிமையின் ஈரம்<p dir="ltr">ஆதித்தனிமையின் ஈரம்</p>
<p dir="ltr">-------------</p>
<p dir="ltr">மிருகக் காலடிச்சூட்டை<br>
என் நாசி நிரப்பி<br>
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி<br>
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த<br>
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது</p>
<p dir="ltr">ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து<br>
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,<br>
என்னுரு மாறி அலகு நீண்டு<br>
முளைத்த கண்களில் காடு பறக்கிறது</p>
<p dir="ltr">ஸ்தூல தேகத்து மரமுடிகளை<br>
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி<br>
முகமுடியின் இருட்டுக்குள்<br>
பதுங்கியிருக்கிற பிறையை<br>
ஈரத்துணி எடுத்து அழிக்க<br>
மாயையின் விரலில் மேகத்தடங்கள்</p>
<p dir="ltr">காரிருள் பொழுதின் காட்டில்<br>
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்<br>
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது</p>
<p dir="ltr">மியாவ் மீசையில்<br>
ஒட்டியிருக்கிற மாமிசவாடை<br>
எலிக்குஞ்சுகளின் சுவையை<br>
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-26180351107060782762016-05-26T18:56:00.001-07:002016-05-26T18:56:24.311-07:00ஆதித்தனிமையின் ஈரம்<p dir="ltr">ஆதித்தனிமையின் ஈரம்</p>
<p dir="ltr">-------------</p>
<p dir="ltr">மிருகக் காலடிச்சூட்டை<br>
என் நாசி நிரப்பி<br>
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி<br>
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த<br>
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது</p>
<p dir="ltr">ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து<br>
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,<br>
என்னுரு மாறி அலகு நீண்டு<br>
முளைத்த கண்களில் காடு பறக்கிறது</p>
<p dir="ltr">ஸ்தூல தேகத்து மரமுடிகளை<br>
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி<br>
முகமுடியின் இருட்டுக்குள்<br>
பதுங்கியிருக்கிற பிறையை<br>
ஈரத்துணி எடுத்து அழிக்க<br>
மாயையின் விரலில் மேகத்தடங்கள்</p>
<p dir="ltr">காரிருள் பொழுதின் காட்டில்<br>
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்<br>
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது</p>
<p dir="ltr">மியாவ் மீசையில்<br>
ஒட்டியிருக்கிற மாமிசவாடை<br>
எலிக்குஞ்சுகளின் சுவையை<br>
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-86568981708089303452016-05-26T16:54:00.001-07:002016-05-26T18:56:38.607-07:00ஈரவலியில் முளைத்த பூஞ்சைக்காளான்கள்<p dir="ltr">வலித்தடங்களின் ஈரம்</p>
<p dir="ltr">---------------------</p>
<p dir="ltr">முதிர்இலையின் மஞ்சள்முகம்<br>
காட்டுநிழலின் தனிமையருந்தி<br>
இரைப்பை நிரம்பி வழிகிற பசியால்<br>
சல்லிவேரின் மார்பை பருகுகிறது </p>
<p dir="ltr">குழலூதி பசியருந்துகிற மூங்கில்காடு<br>
பார்வையற்றவளின் உதடுகளால்<br>
ஒலியின் ஊனத்தை வாசித்து<br>
கானல்வெளியில் வெம்பிக்கொண்டிருக்கிறது </p>
<p dir="ltr">வலையோட்டையில் தப்பிவிடுகிற<br>
மீன்குஞ்சுகள்<br>
வற்றிய நதியில் மீன்களாகின</p>
<p dir="ltr">மழைநீரில் மூழ்கிய காகித மழலைகள்<br>
பின்னொரு நாள்<br>
கருகி சாம்பலாகின்றன<br>
நீரின் தாகம் ஒரு வெயிலை பருகுகிறது</p>
<p dir="ltr">ஈரலின்சுவை உமிழ்கடலை பெருக்க,<br>
செம்மறிக்கிடாவின் தோல்<br>
மட்டைவேலியில் சொட்டிக்கொண்டிருக்கிறது</p>
<p dir="ltr">இரவில் உதிர்ந்த இரத்த வலியால்<br>
விழித்திருக்கிற தனியொருத்தியின் கனவில்<br>
உறக்கம் தற்கொலை செய்துகொண்டது ..</p>
<p dir="ltr">- அதிரூபன் </p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-45945216721801637642016-05-23T12:57:00.001-07:002016-05-23T12:57:46.082-07:00ஒருகண மனக்காதல்<p dir="ltr">மனசுவிட்டு பேசுறதுக்கான கணத்த உன்னோட அருகாமை தான் கொடுத்துச்சு.<br>
உயிருக்கும் உடம்புக்கும் இடைபட்ட தூரத்தில உன்னோட முகத்த நிரச்சுவச்சிடுக்கேன்.<br>
எனக்கான ஒன்னு உன்னோட சிரிப்பில மறஞ்சே வாழ்றதுக்கான ரகசியத்த<br>
ஒருதரயாது சொல்லிடு.<br>
மனசு நெறஞ்சு வாழ்ற வாழ்க்கை சொர்க்கம்னு நீ சொன்ன வார்த்தைல தான்<br>
என்னோட மனச தொலச்சிட்டேனு<br>
என்னால நேர்படச் சொல்லமுடியல.<br>
இன்னும் வார்த்தையாக்கப்படாத என்னோட உணர்வுக்குலாம் உன்னோட பெயர் தான் வச்சிடுக்கேன்.</p>
<p dir="ltr">எப்பவோ<br>
அழும்போது பெய்யிறமழையில உன்னோட அன்பும் சேர்ந்தே விழுந்துச்சுன்னா எனக்கான உலகத்த உன்காலடில வரஞ்சுவச்சிடுட்டு செத்துப்போய்டனும்னு இப்பத்தோணுது மித்ரா.<br>
இந்த அரூபமான காதல ரூபமா மாத்தக்கூடிய உன்னோட சம்மதம் இருக்கே, அது இந்த உலகத்துவிட பெரியது</p>
<p dir="ltr">பிரபஞ்சத்தோட அழிவுல இருந்து இன்னும் உயிர்ப்பா இருக்கிறது காதல் மட்டும்தான்னு நான் சொல்லைல<br>
நீ தலையாட்டியது,<br>
இப்பவும் எனக்கு முன்னால வீசுற காத்துல தெரியுது.<br>
நீ பேசாத வார்த்தைல தான் என்னோட உயிர அடச்சுவச்சிருக்கேனு உணர்வுப்பூர்வமா சொல்றதுல அபத்தம் இல்லைனு நினைக்கிறேன்.<br>
மனசுக்குள்ள வீசுற காத்துக்கு உன்மோகம் வந்திருக்குனு சட்டுனு என்னால சொல்லமுடியல.<br>
உனக்குள்ள மூழ்கி கிடக்கிற என்னோட நினப்ப ஒருதர தொட்டுபார்த்த அப்படினா.,<br>
நம்ம வாழ்க்கை அழகாகிடும்.</p>
<p dir="ltr">மித்ரா மித்ரா னு உன்பேருல இருக்கிற போதைய<br>
எந்த ஆல்கஹால், நிக்கோடினோ கொடுக்காதுங்கிற மடத்தனத்த<br>
காதல்னு பிடிச்சு கொண்டாடுற நான்<br>
பைத்தியக்காரனுக்கு மேலதான்</p>
<p dir="ltr">பொதுவா ஆணோ பெண்ணோ<br>
காதலுல கெஞ்சவிட்டு கெடக்கிறதோட சுகவலிய<br>
நானும் உணர்ந்திடுக்கேனு நினைக்கும்போது<br>
கொஞ்சமா மனசு உன்கிட்ட கெஞ்சிறதுல தப்பில்ல தான் ..</p>
<p dir="ltr">காதல வெறும் கண்ணால மட்டும் காட்றதுல<br>
என்ன நியாயம் இருக்குனு புரியல.</p>
<p dir="ltr">உயிர்வாழனும்னு விரும்புற உலகத்தோட பொதுபுத்தில இருந்து விழகி<br>
உனக்காக சாகுறதுங்கிற அந்த கணத்த அழகுனு முழுசா என்னால நம்பமுடியல</p>
<p dir="ltr">உன் நிழலத் தொட்டுபாக்குற வாழ்க்கை<br>
என்ன வாழவச்சிடும் மித்ரா</p>
<p dir="ltr">இந்த கடிதத்த உன்மனசு படிக்கும்ங்கிற நம்பிக்கைய<br>
இந்த கணம் எனக்கு கொடுத்திருக்கு</p>
<p dir="ltr">கெஞ்சுறது மட்டுமே காதலுல அழகு இல்லடி ......</p>
<p dir="ltr">ப்ளீஸ்.....</p>
<p dir="ltr"> --------------------</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-77012153087348271922016-05-21T06:58:00.001-07:002016-05-21T06:58:22.619-07:00முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்<p dir="ltr">முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் <u>காமம்</u></p>
<p dir="ltr">- - - - - - - - -</p>
<p dir="ltr">தவளையின் குரல்வளைக்குள்<br>
வியர்த்துப் பெய்கிற மழை<br>
பின்னிரவில்<br>
கூடாரப்பொதிசுமந்த நத்தையின் தேகத்தில்<br>
ஈரத்தை உலர்த்துகிறது</p>
<p dir="ltr">பிசுபிசுப்பணிந்த உடற்நாவால்<br>
சைக்கிள் தடங்களை வரைந்து செல்கிற உயிர்<br>
சுருளியோட்டின் மாகுகைக்குள்<br>
ஐம்புலனின் தாகத்தை கொண்டடைக்கிறது</p>
<p dir="ltr">இருளடர்ந்த நத்தை விழிகளுக்குள்<br>
ஜஸ் ஈரத்தின் உரு ஊறுவது<br>
மழைபோர்த்திய மணல்துகளென நெழிகிறது</p>
<p dir="ltr">இனம்தேடி கொம்பு நீட்டும்<br>
பெருஉடலின் ஜவ்வுக்காமம்<br>
ஒரு முதிர்சருகின் ஓசையில் ஒட்டிக்கிடக்கிறது</p>
<p dir="ltr">மழைமழையென வேண்டிதிரிந்த<br>
இரவுநேரத்துக் கம்பளிக்குள்<br>
ஒரு நத்தைக்குடும்பம்<br>
காமம் உண்பது<br>
மழைநீர் உறைநீராகும் காலம்வரை நீடிக்கும் ...</p>
<p dir="ltr"> - அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-2687675124614574062016-04-30T04:46:00.001-07:002016-04-30T04:46:23.209-07:00நிழல் உதிக்கும் மலர்கள்<p dir="ltr">நிழல் உதிக்கும் மலர்கள்</p>
<p dir="ltr">- - - - - - -</p>
<p dir="ltr">தீவு நிலத்தில்<br>
காணப்பெறாத மலரொன்றை<br>
என் உள்ளங்கையின் ரேகைகளுக்குள் விளைவித்து,<br>
நீ துயிலிழந்த படுக்கையறையில் பத்தரபடுத்துகிறேன்</p>
<p dir="ltr">மருதாணிக்காடொன்றில் தொலைந்துபோன ஜீவன்<br>
என் உடலை விழித்திருக்கச் செய்கிறது<br>
உன் படுக்கையறை மலரின் வாசம்<br>
என் விழிகளில் வழிதேடுகிறது</p>
<p dir="ltr">நித்திரை அற்றுப்போன நம் விழிகள்<br>
இருளின் பெரியமூங்கில் கூட்டொன்றில்<br>
கனவுகளை ஈனுகின்றன<br>
பிரசவித்த கனவுகளின் உடலில்<br>
தீவுமலர்களின் வாசம்</p>
<p dir="ltr">மேகங்களின் காதுக்கருகில் நிலா உறங்குகிறது<br>
அது உறங்கி உறைகிற இருளில்<br>
மலர்கள் திசைகளை மேயத்தொடங்கின</p>
<p dir="ltr">நீர்காகமொன்றின் நிறத்தில்<br>
ஒரு காடு விழிகளுக்குமேல் படர்வதை உணர்கிறேன்<br>
என் இமைத்தாவரத்தில் உதிரத்தொடங்கிய பூவின்சாயல்<br>
உன் படுக்கையறை மலரோடு கலந்திருக்கிறது</p>
<p dir="ltr">இருள் சரிகிற அதிகாலையின் வெயிலில்<br>
தீவுநிலமலர் உன் கூந்தலுக்குள் நிழல் பரப்பும்</p>
<p dir="ltr">மீண்டுமாய் ஒருபெரும்வாசத்தில்</p>
<p dir="ltr">காட்டுக்குள் தொலைந்துபோனவனின் பாதையை<br>
இந்தமலர் உனக்கு வழிகாட்டும் ..</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-11084864908687269102016-04-20T20:04:00.001-07:002016-04-20T20:04:43.132-07:00இருளின் ஒலிமுகங்கள்<p dir="ltr">இருளின் ஒலிமுகங்கள்</p>
<p dir="ltr">- - - - - - - -</p>
<p dir="ltr">இரவின் மேல் படரும் உணரொலிகள்<br>
ஆழ்மனதின் காதுகளுக்குள் இறங்குகின்றன</p>
<p dir="ltr">இருளின் ஒலிமுகங்கள்,</p>
<p dir="ltr">தனிமையின் பெருத்த மௌனத்தை<br>
புல்லாங்குழலின் விழிகளில் இருந்து<br>
கசியவிட்டிருக்கிறது</p>
<p dir="ltr">முகமறிய ப்ரியப்படும் இருளின் கடவுள்கள்<br>
இரவின் கவிதைகளை வாசித்துக்காட்டுகின்றனர்<br>
மொழி உருண்டோடும் பாதைவெளிகளில்<br>
கனவுகளின் நிசப்தங்கள்</p>
<p dir="ltr">விரல்களின் அணைப்பில் பரவும் கதகதப்பில்<br>
மெத்தைமேல் விரியும் இருளின் ஒலிகள்<br>
பசித்த ஆட்டுக்குட்டியின் கண்களை<br>
முத்தமிடுகின்றன</p>
<p dir="ltr">காத்திருத்தலுக்கான தலைவியின் காதல்<br>
மௌனத்தின் சுடரொளியை மேயத்தொடங்கியது<br>
அவளின் திசையில் எரிகிற காட்டுத் தீ<br>
தனிமையின் ஊடலை பெருங்காடாக்கி எரிக்கிறது</p>
<p dir="ltr">மணம் வீசுகிற பாதையின் வனத்தில்<br>
மலர் விரிகிற நுண்சப்தம்<br>
இரவின் காதுகளில் விழுந்தெழுகிறது,<br>
திசையெங்கிலும் தனித்துக்கிடக்கிற ஒற்றைமுத்தங்கள்<br>
மலரின் மகரந்தவெளிக்குள் நிறைந்து கிடக்கின்றன</p>
<p dir="ltr">அமிழ்தல் அற்றுக்கிடக்கிற ஒலிமுகங்கள்<br>
இரவின் மழையில் சடசடக்கின்றன<br>
ஒலிஒளியிலான இரவென்பது<br>
ஒவ்வொரு கண பிறத்தலிலான அழுகையின் முழுமை ..</p>
<p dir="ltr"> - அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-63854032336845021922016-04-15T19:22:00.001-07:002016-04-15T19:22:32.406-07:00நீரில் விழுந்த காடு<p dir="ltr">நீரில் விழுந்த காடு</p>
<p dir="ltr">- - - - - - - - - </p>
<p dir="ltr">நிழலடர்ந்த வனநிலத்தின் மரங்கள்<br>
வெய்யில்நேர பைக்கால் ஏரியில்<br>
உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்</p>
<p dir="ltr">அலகு நீண்ட பறவையின் பசி<br>
இந்த நீரின்மீனை கவ்விக்கொண்டிருப்பதான பிம்பம்<br>
இந்த நீரில் துடித்திக்கொண்டிருக்கிறது</p>
<p dir="ltr">செவ்வெறும்புகளின் கூடொன்று<br>
கொய்யாஇலையின் உடலெங்கிலும் படர,<br>
நீரின் மேலே விழுந்த மரங்களில்<br>
ஊறிக்கொண்டிருக்கிறன உயிர்கள்</p>
<p dir="ltr">வலுவிழந்து முறிந்த கிளையொன்றில்<br>
ஒரு இலையின் உயிர் பிரிந்துபோக,<br>
இன்னும் ஆதித்தோற்றத்து பிஞ்சிலைபோல் இருக்கிறது<br>
நீரில் விழுந்த நிழலிலை</p>
<p dir="ltr">மரவிலங்கொன்று<br>
காட்டுமரத்தின் மேலேறி உறங்க,<br>
வயிறுப்பி இறந்துபோய் மிதக்கிற உடல்<br>
இந்த விலங்காக இருக்கிறது</p>
<p dir="ltr">பறவையின் இறகுதிர்த்தலின் போது<br>
சிறகுக்கூடை பிரிந்த இறகொன்று<br>
நீரின் மேலே விழ,</p>
<p dir="ltr">ஒரு காடு குழைகிறது ..!</p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-34246648752803345052016-04-09T12:27:00.001-07:002016-04-09T12:27:09.438-07:00ஜிப்ரானின் காதலி<p dir="ltr">செல்மாவின் விடியல்களில்<br>
கனவுகள் உதிரத்தொடங்கியபோது<br>
மர ஆடையின் ஈரத்திற்குள்ளிருந்து<br>
இமைகள் இமைக்கத்தொடங்கின</p>
<p dir="ltr">வான்பொத்தல்களில் இருந்த<br>
மூடுபனியின் இருட்டு<br>
விழிகளுக்குள் சுவர்க்கம் பரப்புகையில்<br>
ஏகாந்தத்தின் மூலையில்<br>
ஆதிக்காதல் பேசத்தொடங்கியது</p>
<p dir="ltr">செல்மாவின்<br>
கல்லறை பூக்களின் மகரந்திற்குள்<br>
ஜிப்ரானின் இசை நிறைந்துகிடக்கிறது</p>
<p dir="ltr">சருகுமழையின் குவியலுக்குள்ளிருந்த<br>
இறந்தகவிதை<br>
ஒரு மின்மினிவெளிச்சத்தில் உயிர்ப்பாகிறது</p>
<p dir="ltr">நீ எழுதிய கவிதையின் எந்தவரியிலும்<br>
நான் உயிரோடு இல்லை</p>
<p dir="ltr">காதலன் சுவைத்த உதட்டுநிறத்தில்<br>
காதலின் விஷம் உயிருக்குள் நூலாகி<br>
காமத்தின் ஆடையை நெய்துகொண்டிருக்கிறது</p>
<p dir="ltr">அதிகாலை இருளில் இதழ்விரிக்கிற கொழிஞ்சிக்காட்டுக்குள்<br>
உன் இளமையின் முத்தம் ஒன்றைத் தேடித்திரியும்</p>
<p dir="ltr">உன் முத்தங்களை வர்ணப்பூச்சிக்கு பருக்கு<br>
அவைகள்<br>
என் கல்லறைச்செடியின் ஆகச்சிறந்த காதல்வாசிகள்</p>
<p dir="ltr">கனவுகளுக்குள் விளைந்த இரவுகள்<br>
உன் கம்பளியை கேட்கின்றன</p>
<p dir="ltr">சின்னதாய் கட்டிப்பிடி <br>
உன் அருகம்புல் ரோமச் சிலிர்ப்புக்குள்<br>
செல்மாவின் இறந்த விழிகள்<br>
திறந்து மூடட்டும் </p>
<p dir="ltr">கொஞ்சமாய் அவைகளை காதல்செய்</p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-88829760297834126232016-04-03T19:21:00.001-07:002016-04-03T19:21:51.052-07:00நிராசைகளின் ஆதித்தாய் கவிதைநூல் விமர்சனம்<p dir="ltr">தூவானக்காட்டில் புல்லாங்குழல் பாடும் பறவை</p>
<p dir="ltr">- - - - - - - - - </p>
<p dir="ltr">உணர் ஊறிய கவிதைமனம் பட்டாம்பூச்சிகளின் ஆடைகளை திருடுகின்றன. அசாதரணமான கணங்களில் சாதாரண மனம் பேசுகிற கவிதைகளில் உலகின் சௌகர்யத்தின் நிறைவு மொழியின் மேலே தக்கையென மிதந்துகிடக்கிறது.</p>
<p dir="ltr">கவிதை பேசிமகிழ எழுத்துப்பூர்வமான வடிவம் அறிந்து மகிழ்கிறேன். " என் ஆன்மாவின் எளிய குரல் கவிதை " என்கிற தேன்மொழியின் காட்டுக்குள் ஒட்டுண்ணித்தாவரம் ஆகிறேன்.</p>
<p dir="ltr">இதுவரை மொழி அனுபவிக்காத வார்த்தைகள் காட்டின் மரங்களென வான் தொடுகிறது. அகவெளியின் காட்சிக்குள்ளே ஆன்மா உரைகிற பாதையை இந்த எழுத்து சமன்செய்கிறது. நம்பமறுக்கிற தேன்மொழியின் எழுத்தின்வெளிகளில் யூகலிப்டஸ் மரங்களின் காட்டுவாசணை. நீர் உலர்த்துகிற பறவைகளின் வெயில் போல இந்த கவிதைகளின் தாகம் என் இருளை பறக்கவிடுகின்றன. மிளகுநிறத்தேநீரின் வாசம் உள்மனதின் சதைகளில் கீற்றிடும் போது என் எதிர் இருக்கையில் இந்த கவிதைகள் தான். </p>
<p dir="ltr">காட்டின் மொழி பேசிமகிழ்கிற மனநாவு தன் பாதைகளில் கவிதைகளை நடவுசெய்கின்றது. ஒவ்வொரு நடவுச்செடியிலும் விரிகிற கவிதைமலர்கள் மனித உயிர்களின் மனதாடையை நெய்துகொண்டிருக்கின்றன.</p>
<p dir="ltr">ஆழ்மனதின் ஆழம் " நான் பனிகுடத்தில் மூளை உருவாகும் காலத்தில் இருக்கிறேன் " இந்த வரிகளுக்குள் தான் இருக்கிறது. இந்த வரியின்முகம் உணர இதுக்குள்ளே சிறைபட்டிக்கிடக்கிறது மனம்.</p>
<p dir="ltr">பைத்தியத்தின் மொழி சிறு புன்னகையில் துவங்குகிறது என்கிற தேன்மொழிக்கும் காற்றை வீழ்த்துகிற பூக்களின் வாசனையில் இருப்பேன் என்கிற தேன்மொழிக்கும் இடையில் மொழியேறமுடியாத உணர்வு இருப்பதாக உணர்கிறேன். </p>
<p dir="ltr">காட்டுப்பாதைகளில் மான்களின் கொம்புகள், ருத்ராட்சமரத்தின் கனிந்த பழங்கள், கிராம்பு மரத்துப் பூக்களின் வாசனை, சாம்புராணி மரத்துப்பூக்கள், ஒட்டுண்ணித்தாவரத்தின் வேர்கள், முள்ளம்பன்றியின் முடியில் கிடக்கும் அழகு, ஆலி மழைபெய்யும் தூவானக்காடு , சிறுமிளகின் இருட்டு என்று இதுவரை மொழியும் மனமும் அனுபவப்படாத பாதைகளில் இவரது கவிதைகள் பயணிக்கவைப்பது தான் அலாதியகணத்தின் கொண்டாட்டமாக உணர்கிறேன்.</p>
<p dir="ltr">"மழையின் தாய் எனக்குள் உறைபனியாய் இருக்கிறாள்"<br>
"வீட்டுக்கதவைத் தட்டிய விரல்கள் என் இளமையோடு முடிந்துவிட்டன " <br>
இந்த எழுத்து உச்சந்தலையில் காயும் வெயிலை சிதைக்கிறது. மழைமலர்களென மனதிற்குள் ஈரவாடையாய் குளிர்கிறது</p>
<p dir="ltr">"நான் என் நாய்குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுறுகிறேன்"<br>
இதுதான் கவிதைமனது. உயிர்களுக்கான பொதுவெளியில் பயணிப்பதே நேர்மையான வாழ்வு. ஒரு கவிதை மற்றொன்றை நியாபகப்படுத்துவது கடந்த காலத்து நாட்கள்மீது படிகிறது என்று உணரும்போது கவிஞன் பேசப்படுகிறான்.<br>
" என் கவிதைகளை வனமரங்களின் காதுக்குள் இறக்க ப்ரியப்படுகிறேன் " என்று நான் எழுதிய வரியொன்றை தேன்மொழியின் உனது ரகசியங்கள் நியாபகப்படுத்தியது. என் பழைய இரவின் மாகணத்தில் இந்த கவிதை அமர்ந்து எழுந்து பறந்துபோகிறது.</p>
<p dir="ltr">"பட்டாம்பூச்சியின் மேனியில் படிந்து வெயிலெனத் தொலைந்தது பருவம்"<br>
"உண்ணிப்பூக்களின் கரிய கனிகளில் உருவாகிறது மொழி"<br>
"ஒற்றை மாம்பூவாய் நெற்றியில் குறுகுகிறது உயிர்" <br>
"மரணத்தின் இருள் மூளையின் செதில்களை உழுகிறது"<br>
" மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினை விட குரல்களே அதிகம் கேட்கின்றன "<br>
- எல்லா காலத்துக்கும் கவிசமைக்கும் தேன்மொழியின் எழுதும்விரல்கள் சமகாலத்தின் வாசகமனதை அல்லது எழுத்துஉடம்பை உறைவிடமாக்கி தேங்கிநிற்கின்றன. இந்த எழுத்து நாம் யாருமே வாழாத வாழ்ந்துபார்க்க முடியாத நாட்களோட பிரதி. இந்திரன் அவர்கள் சொன்னதுதான், இவரின் கவிதைமொழி இயற்கையின் தறியில் நெசவு செய்யப்படுகிறது. </p>
<p dir="ltr">தென்றலை ஆடையாக அணிய நினைக்கிற பைத்தியக்காரி நிச்சயம் கவிதைக்காரியாகத்தான் இருப்பாள்.<br>
" தென்றலை ஆடையாக அணிந்தபோது நிலவுக்கு சாம்பலின் அங்கம் என்று கண்டேன்" என்கிற தேன்மொழி தாஸ்ஸின் கவிமனதை பைத்தியம் என்பதிலே மாஉண்மை பேசியதுபோல மகிழ்கிறேன். பலநேரங்களில் பைத்தியக்காரர்கள் தான் மனிதமனம் பேசாத உணராத ஒன்றை பேசுவார்கள். கவிதைகளும் அப்படித்தானே.! <br>
சிங்கத்தின் கண்களில் நேநீரைப்போன்ற கடல் அசைவதை கண்டேன் என்கிற வேறொருமனதிற்கு பித்துப்பிடித்ததை அவ்வளவு அழகாக ரசிக்கிறேன்.<br>
குழந்தைகள் பைத்தியக்காரர்கள் கவிதைஎழுதுபவர்கள் இவர்கள் ஒரே மரத்தில் விளைந்த பூக்களாக மணக்கின்றனர்.</p>
<p dir="ltr">'நாவுமரம்' என்கிற வார்த்தை என் உயிருக்குள் சருகுதிர்பதாய் உணர்கிறேன்.<br>
மணலின் மீது நடக்கும் போது விழும் பள்ளம் அவனுக்கு காதல்<br>
காற்றடிக்கும் திசை அத்தனையிலும் காதலிகள்.<br>
இந்த வரிகள் மீது காதல் உதிக்கிறது. மனம் விரும்புகிற ஒன்றின் மடி இந்தமாதிரியான கவிதைகள் தான்.</p>
<p dir="ltr">"மழைகள்" "மழைநிலா"<br>
என்னமாதிரியான வார்த்தைகள் இவை.! மனம் இந்த முரணடர்ந்த வார்த்தைகளை விழுங்கி வாழ்கிறது. <br>
"பல்லாயிரம் புறாக்களின் சிறகுகள் நரம்புகளுக்குள் பயணிக்கின்றன" <br>
சாம்புராணி மரத்துப்பூக்களை தேவதைகளின் ஆடைகளென சொன்ன அந்த மனதின் ரகசியங்களகத்தான் நான் இப்போது காதலிக்கிறேன்.<br>
எல்லா வார்த்தைகளில் இருந்தும் புதுவெளி பிறக்கிறது. மனம் நம்பமறுக்கிற கவிதைகளின் ஆச்சர்யம் எல்லா பக்கங்களிலும்.</p>
<p dir="ltr">"உள்ளங்கையில் வெயிலை ஏந்தி<br>
நேனீர் விழிக்குள் தேயிலைக்காடுகளை நடுகிறேன்"</p>
<p dir="ltr">மனம் ஆயிரம் குமிழிகளாய் உடைந்து பறக்கிறது. என் எல்லா திசைகளிலிம் இந்த கவிதைகளை விட்டெரிகிறேன். அவைகள் அதற்கு தேவையான உணவுகளை காட்டுமூங்கிலின் மனமுடையோரிடம் உண்று வாழட்டும்.</p>
<p dir="ltr">இன்னும் குறிப்பிடாத ஒரு கவிதை, காமத்தின் பின் தொடரல் . இது கவிதையென்பதையும் தாண்டி இவ்வாழ்வின் ஒழுங்கிற்குள் பயணிக்கிற கண்நரம்புகளாகத்தெரிகிறது. பெண், வாழ்நாளில் எல்லா திசைகளையும் மலை பாதையில் தொலைந்த தடங்களாக எண்ணச்சொல்கிறது இந்தக்கவிதை.</p>
<p dir="ltr">கவிதைகளின் மீதேறி பயணிக்க பிரபஞ்சத்தை கவிதையாக்கி காகிதமனம் படைக்க மாநுடம் உணராத புதுவெளியில் தன் பட்டாம்மூச்சிகளை பறக்கவிட எல்லாவுமாய் இருக்கிறது தேன்மொழி தாஸ்ஸின் கவிதைகள்.</p>
<p dir="ltr">படித்துணர்ந்ததில் கற்றுக்கொண்டவன் ஆனேன்.<br>
பெரும்மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அக்கா</p>
<p dir="ltr">- அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-36022092407608711372016-03-29T15:55:00.001-07:002016-03-29T15:55:30.228-07:00சவ அறை<p dir="ltr">என் அறையின் முகத்தில் சவவாசணை</p>
<p dir="ltr">- - - - - - -</p>
<p dir="ltr">நீங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த<br>
ஒரு தற்கொலையின் கயிற்றில்<br>
ஒரு பிணம் வாய்திறக்கிறது</p>
<p dir="ltr">அது,<br>
என் ஆதிநாவின் இறுதிமொழியை<br>
அறைசுவர்களில் முகங்களில் பூசுகிறது</p>
<p dir="ltr">என் வாழ்நாள் சூன்யத்தை<br>
ஒரு கடிதத்தில் நிறப்புவதுதான்<br>
தற்கொலையின் சுவையென நினைக்கிறேன்</p>
<p dir="ltr">எல்லா ரகசியங்களையும்<br>
ஒரு காகிதத்தில் தெரிந்துகொள்ள இருக்கிற நீங்கள்<br>
ஆழ்மன வீரியம் மிக்கவர்தான்</p>
<p dir="ltr">மனம் வலித்து அழுகிற<br>
கடைசியத் துளியின் இருப்பு<br>
தற்கொலையாகத்தான் இருக்கிறது<br>
ஒருபோதும் வாழ்வின் நீதியை<br>
இந்தக்கயிறு ஏற்றுக்கொள்ளாது</p>
<p dir="ltr">அநீதிகளின் கசப்புத்தன்மையில்<br>
ஒரு விஷமிடர் கலந்திருப்பது<br>
மரணத்தை சுவைக்கத்தான்</p>
<p dir="ltr">யாமம் அச்சுறுத்துகிற<br>
இந்தப்பேய்யிரவின் பம்மிய வெளிச்சத்தில்<br>
என் ஆன்மா அலைந்து திரிவதை<br>
நீங்கள் காணக்கூடும்</p>
<p dir="ltr">அது<br>
உணர்த்துகிற பயத்தின் உச்சம்<br>
உங்கள் உயிர் பற்றிய<br>
இருதயத்துடிப்பு தான்</p>
<p dir="ltr">கழிவறையின் நூலாம்படையில் தொங்கிக்கொண்டிருக்கிற<br>
எட்டுக்கால் பூச்சியின் வயிற்றுப்பகுதியில்<br>
என் ஆன்மா மறைந்தே வாழும்</p>
<p dir="ltr">கொஞ்சம் பொறுத்திருங்கள்</p>
<p dir="ltr">இலைகள் சருகாகும் காலத்திற்குள்<br>
ஒரு கட்டில் உதைக்கப்படும்<br>
கதவுகள் உடைக்கப்படும்</p>
<p dir="ltr"> - <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-5369449577103988212016-03-22T15:59:00.001-07:002016-03-22T15:59:38.669-07:00காட்டுத்தோழியின் பார்வையில்<p dir="ltr">காட்டுத்தோழியின் பார்வையில்</p>
<p dir="ltr">- - - - - - - - - - </p>
<p dir="ltr">மௌனம் புதைத்து எழுந்த<br>
அடர்வனத்தின் வாசம் நீ<br>
ஒரு மழையின் தெரிப்பில் பேசந்தொடங்குகிறாய்</p>
<p dir="ltr">எனக்குள்ளான உன்வரவை<br>
காட்டில் தொலைந்துபோனவளின் பாதை என்கிறாய்</p>
<p dir="ltr">நீ அறியாத ஒரு வாசத்திற்கு<br>
என்பெயர் வைத்திருப்பதாய் சொல்கிறாய்</p>
<p dir="ltr">ஒரு முயல்குட்டியின் முள்ளங்கிச்சுவைபோல் தான்<br>
என் பேச்சின் வாசமும் என்கிற உன்னால்,<br>
பொருள் தெரியாத பொய் அறிந்து மகிழ்கிறேன்</p>
<p dir="ltr">எனக்காக ஒரு இலையை பத்தரபடுத்தியிருக்கிற<br>
உன் புத்தகங்களுக்கு மத்தியில்<br>
உறங்கிப்போவதாய் உணர்கிறேன்</p>
<p dir="ltr">ஒரு நதியின் ஓட்டத்தில்<br>
ஒன்றிக்கொண்டிருக்கிறது இருவரின் பிம்பம்,<br>
நாம் இணைந்த நீரில்<br>
பல முள்ளில்லாத மீன்குஞ்சுகள்<br>
நீந்திப்போவதன் ரகசியத்தை<br>
என் செவிமடலுக்கருகில் கிசுகிசுக்கிறாய்</p>
<p dir="ltr">இந்த மீன்குஞ்சுகளின் குரல்வளைக்குள்<br>
நம் பாத அழுக்குகள் ஒன்றுசேர்வது<br>
என் ஆசைக்குள் நீ மூழ்கிவிட்டதாய் எண்ணுகிறேன்</p>
<p dir="ltr">மரக்குகையொன்றில்<br>
கிளி மறைத்துவைத்திருந்த<br>
கொய்யாப்பிஞ்சினை<br>
எனக்காக திருடி வந்து நீட்டுகிறாய்</p>
<p dir="ltr">என் காட்டுவழிகளில்<br>
உன் பாதவடிவத்தில்<br>
புலியொன்று திரிகிறது என்கிற உன்பேச்சை,<br>
நம்பித்தான் ஆகவேண்டும்</p>
<p dir="ltr">இந்தப் பெருங்காட்டை<br>
ஒரு விதைக்குள் திணித்து<br>
மென்று கொண்டிருக்கிறேன்,<br>
உன்னை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கிறேன்<br>
என்கிற உன் <u>வனக்</u>குரலைத்தான்,<br>
நான் காதலிக்க விரும்புகிறேன் ..</p>
<p dir="ltr">- அதிரூபன்.</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-39173390270490725882016-03-20T12:46:00.001-07:002016-03-20T12:46:11.193-07:00இருள்நிறதாகம்<p dir="ltr">இருள் நிற தாகம்</p>
<p dir="ltr">- - - - - - - - -</p>
<p dir="ltr">நிலவின் குளிரில் மேய்ந்துகொண்டிருக்கிற விலங்குகள்,<br>
மோகப்பசியின் உடல்சூட்டிற்குள்<br>
தன்னை பொருத்த நினைக்கின்றன</p>
<p dir="ltr">நிறமற்ற பூக்களின் மகர்ந்தத்திற்குள்<br>
பூச்சி வடிவிலொரு காமம் இறங்கி,<br>
தன் பிறப்புநாக்கிலிருந்து பெருங்கதை பேச<br>
காம்புகள் பெருத்து நிறைமாதமாகின்றன பூக்கள்</p>
<p dir="ltr">பச்சையத்தின் வேர்களுக்கு<br>
காதலிக்க சொல்லித்தருகிற ஆகாயத்தின் நீர்த்துளி,<br>
பெரும் மின்னல் வெளிச்சத்தில்<br>
முத்தமிட நாநீட்டுகிறது</p>
<p dir="ltr">வெய்யில்பாறையின்<br>
இலைஇல்லாத பிறந்த செடிகளின் ரோமங்கள்,<br>
சூரியனை மென்று உடலரும்புகிற ரகசியம்<br>
நான் மட்டும் அறிவேன்</p>
<p dir="ltr">உடல் திறந்து பார்த்து<br>
நிறைந்திருக்கிற காற்றின் உயிரில்<br>
இருள்நிறக் காமம் கலந்திருப்பதன் அவசியம்,<br>
எனக்கும் உனக்கும் சம்பந்தப்பட்டது..</p>
<p dir="ltr">- <u>அதிரூபன்</u></p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-75867977838217665362016-03-08T18:43:00.001-08:002016-03-08T18:43:58.966-08:00காட்டின்மொழி பேசுகிற நாவு<p dir="ltr">காட்டின்மொழி பேசுகிற <u>நாவு</u></p>
<p dir="ltr">- - - - - - - - -</p>
<p dir="ltr">மௌனம் ஊரிப்போன அனாந்திரக்காடு, ஆளரமில்லாத வெளி, உயிர்களின் வாசம் சங்கீதத்தை பேசும் சத்தம், மாகணம் வாய்க்கப்பெற்ற ஒற்றையாய் நான். </p>
<p dir="ltr">தூர சத்தத்திலிருந்து ஒரு துயரம் அழுவதை என் செவிகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.<br>
யாருடைய அழுகை அல்லது யாருடைய பசி அது..?</p>
<p dir="ltr">புலப்படாத தூரத்திலிருந்து புலப்படாத சத்தம் கசிவது ஒருவித அச்சம் கலந்த ரசணைதான்.!<br>
சத்தத்தை செவிகளின் விழி நுகர்கிறது.<br>
பறவைக்குஞ்சுகளின் முதல் அழுகையாக தெரிகிறது,முதல் பசியாகவும் தெரிகிற பிஞ்சுக்குரல். </p>
<p dir="ltr">இந்த சத்தத்திலிருந்துதான் வனம் என்னுடன் பேசத்தொடங்கியது. அந்தக்குரல் தேடி அகம் அலையும் திசைகளில் தாவரநெருக்கங்கள். </p>
<p dir="ltr">யானையின் முகம் அளவிற்கு பெரிதாய் இருக்கிற அந்த இலையின் பெயர் அறிந்துகொள்ள மனம் ஆசைப்படுகிறது.<br>
நானும் இலையிடம் பேசிப்பார்த்தேன், ஒரு சிறுகாற்று அசைவில் தலைஆட்டிவிட்டு, தன் முகத்தில் மஞ்சள்வெயிலை வாங்கிக்கொண்டு நிறமாற்றமடைகிறது.</p>
<p dir="ltr">இந்த ஒளிஒலிக்காடு அதற்கான ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதது தான், அதன் அழகென பார்க்கிறேன். </p>
<p dir="ltr">மலையொன்றிலிருந்து ஒருபெரியமழை அருவியாய் பேசிவிழும் சத்தம் காதுமடலை குளிர்விக்கிறது.</p>
<p dir="ltr">வனமெங்கிலும் பேசுகிற சத்தம்தான்.மனிதபார்வைக்கு புலப்படாத மனிதறிவிற்கு எட்டாத மனிதன் தவிர்த்த உயிர்களின் சத்தம். </p>
<p dir="ltr">பிற உயிராக இருந்துபார்ப்பதென்பது எல்லைகளில்லா ரசனை நிறைந்த அனுபவம்.! எறும்பின் குரலை யாரேனும் அறிந்திருப்பாரோ.!?<br>
அதன் குரலின் மீச்சிறு அளவை நான் இதுவரை அறிந்ததில்லை.</p>
<p dir="ltr">என் எதிரே ஒரு முயல் இருகுட்டிகளை பிரசவித்து, மயக்கத்தில் இன்னும் கண்திறக்காது கிடக்கிறது. அதன் பிரசவவாடை என்னை தீண்டிவிட்டு கொஞ்சமாய் காடு கலக்கிறது.</p>
<p dir="ltr">குட்டிமுயலொன்றை தொட்டுப்பார்கிறேன்.அதன் பாதமொன்றை விரித்துப்பார்கிறேன். நான்கு முகங்கள் அதன் பாதத்தில். சின்னசின்னதாய் நீண்டகாதுகள். தூக்க நினைக்கும் நேரத்தில் முயல் கண்விழித்துக்கொண்டது.<br>
அவர்களின் மகிழ்வை பார்த்துக்கொண்டே தடமில்லா வெளியில் பயணிக்கிறேன்.</p>
<p dir="ltr">மழை பெய்து ஓய்ந்த வனத்தின் ஒரு பகுதி, தற்கணம் நான் நின்றுகொண்டிருப்பது. ஈரவெளி,ஈர இலை, ஈரத்தடங்கள் எல்லாம் குளிரின் ஆடை போர்த்திக்கிடக்கிறது. </p>
<p dir="ltr">மழைக்குருவியொன்று தன் இனத்தோடு ஒரு நெரிசல் மரத்தின் மடியில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. பெயர்தெரியாத நிறத்தில் மஞ்சாங்குட்டிகளின் நடுக்கம், ஒரு விரிந்த வனத்திற்குள் தனித்துதெரிகிறது.</p>
<p dir="ltr">இதுவல்லவா பூரணம்..!</p>
<p dir="ltr">இதில் ஏதாவது ஒரு குருவியின் சிறகுகளில் இருந்து விழும் இறகுகளை பத்தரபடுத்த ஆசை மேலோங்குகிறது. நியாயமான ஆசைதான்.எந்த நிறங்களின் இறகுகளும் மரித்துப்போகவில்லையே.</p>
<p dir="ltr">வனக்காதுகளில் என் தடங்களின் சத்தம் விழுந்தநேரத்தில் சிலநிமிடம் அமைதியாய் இருந்தது காடு.<br>
இந்த மௌனத்திலிருந்து ஒரு மிருகத்தின் சத்தம் என் தைரியத்தை குழைக்கிறது. ஒரு பெருங்காடு இந்த பயங்கரத்தால் பழகியிருப்பது எனக்கு புதிதுதான்.</p>
<p dir="ltr">கால்களில் நீர் ஊறுகிறது. நிர்ப்பது சதுப்புநிலக்காடொன்றின் பகுதியில். மனதின் மையத்தை நனைக்கிறது இந்த நிலத்தின் குளிர்ச்சி.<br>
இங்குள்ள மரங்களின் வேர்கள் மண்ணுக்கு மேலே நீண்டுகிடக்கிறது. தலைவிறிக்கோலமாய் வாழ்கிற மரங்கள் என் பார்வையில் புதிதுபுதிதாய் தெரிகிறது.என் செவிகளுக்குப்புரிகிற பாசையில் பேசுகிறது.</p>
<p dir="ltr">இங்குதான், நிலத்தின் வாசம் நாசியில் நிறைந்துகிடப்பதாய் உணர்கிறேன். வாசம் உணர்கிற அறிவில் நான் மனிதவாசம் அற்றவனாய் போனேன்.</p>
<p dir="ltr">உயிர்களோடு ஒன்றி வாழ்வது எத்தனை எத்தனை சுகமானது. எண்ணிலடங்கா ஞானத்தை இந்த வெளியிலிந்து கற்றுக்கொள்ளலாம்.</p>
<p dir="ltr">நான் இவ்வாறு வாழ்கிற வாழ்வு என் அகவெளி சம்பந்தப்பட்டதே. என் இந்த வாழ்வு ஒரு காடொன்றை வரைகிறது. அதன் எல்ல திசைகளிலும் உயிர்களின் மனமணம்.</p>
<p dir="ltr">நாம் பேசுவதை நாம் கேட்கிற வாய்ப்பு இந்த நிலத்திற்கு மட்டுமே உரியது.</p>
<p dir="ltr">வாழ்வு என் நாட்களை இவ்வாறு எழுதியிருக்கிறது. காடொன்றில் தொலைந்துபோக மனம் வேண்டுகிறது.</p>
<p dir="ltr">காட்டின் மொழி அறிந்த கணத்திலிருந்து என் கவிதைகளை வனத்தின் காதுகளுக்குள் இறக்க ப்ரயாசைப்படுகிறேன்.</p>
<p dir="ltr">என் வாழ்வு என்னோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை.</p>
<p dir="ltr">வனம் வாழ்தலானது...!</p>
<p dir="ltr">- அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-41989506778786258262016-03-05T17:54:00.001-08:002016-03-05T17:54:58.711-08:00இரவல் தேடி<p dir="ltr">இரவல் கேட்டு செவி நீட்டுகிறது இரவு</p>
<p dir="ltr">அடர்மௌனத்திலிருந்து<br>
ஒரு பறவையின் சிறகசைவு சிதறுகிற தெரிப்பு<br>
இந்த வானத்தின் எல்லா திசையிலும் தான்</p>
<p dir="ltr">திசை தேடிச் சிறகுவிரிக்கும்<br>
ஆக்காட்டியின் இலந்தைப்பழக் கண்களில்<br>
ஒரு கருப்புவனம்<br>
வானில் சத்தமிட்டுக்கொண்டே பறக்கிறது</p>
<p dir="ltr">நிர்வாணமரத்தின் <br>
கிளைமுறிந்த கொம்பில்,<br>
இரு மூக்குநீண்ட பறவையினப் பறவைகள்<br>
மரத்தின் ஆடையை அணிந்து<br>
இரவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் செய்கின்றனர்</p>
<p dir="ltr">கூண்டுப்பறவையொன்று<br>
பாடத்தொடங்கியது,<br>
அதன் குரலின் அழுகையில்<br>
ஒரு வானம் வருந்திக்கொண்டிருப்பதாக<br>
இந்த இரவு எனக்கு மொழிபெயர்க்கிறது</p>
<p dir="ltr">இப்போதுதான் சிறகுமுளைத்த மகிழ்ச்சியில்<br>
பறக்கத்தொடங்கிய ஒருபிஞ்சுஇளம் குழந்தை,<br>
வலையின் வானத்தில் மாட்டிக்கொண்டதன் ரகசியம்<br>
என் செவிகளை ஊமை ஆக்கியது</p>
<p dir="ltr">தூங்கிக்கொண்டிருக்கிற<br>
குழந்தையின் கைவிரல்கள்,<br>
கனவில் பட்டாம்பூச்சியை தொட நீளுகிறது.<br>
இந்தச்சுகம் மட்டுமே<br>
பறத்தலுக்கான சிறைபிடியை<br>
ரசிக்க கற்றுத்தருகிறது ..</p>
<p dir="ltr">- அதிரூபன்<br>
</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1588097635242161737.post-41305795501109989862016-03-05T12:11:00.001-08:002016-03-05T12:11:05.986-08:00தேகவெடிப்பு<p dir="ltr">தேகவெடிப்பு</p>
<p dir="ltr">- - - - - - - - - -</p>
<p dir="ltr">கூதல் காலத்துக் கனவுகளில்<br>
முத்தம் தேடித்திரியும் யாமத்தின்இரவுகள்<br>
பாலைதேசத்தின் வெம்மைகுடித்துச் சாவும்,<br>
வெய்யோன் கடித்து வளர்கிற கள்ளியின் மொட்டுகள்<br>
சூரியனின் உதடுகளை நியாபகப்படுத்துகின்றன,<br>
பனிஈரம் படரும் கிளைப்பூக்களின் உயிரை<br>
பட்டாம்பூச்சிகள் உறிஞ்சி நாசிநிறைப்பது<br>
அதிகாலையின் ஆகச்சிறந்தக்காதல்,<br>
ஆவாரம்பூவின் மஞ்சள்நாவுகள்<br>
கூந்தலின் தேகத்தில் வாசம்காண்பது<br>
பகல்நேரத்தின் பிஞ்சுக்காமம்,<br>
கதிர்கள் உதித்து பிறை மறையும் பொழுதெங்கிலும்<br>
முத்தத்தின் வாடை பிரபஞ்சத்தை இறுக்குகிறது.,<br>
குமரியொருத்தியின் பறித்தலுக்காக மட்டுமே<br>
பூத்துக்கொண்டிருக்கின்றன என் தொட்டில்செடியின் காமம் ..</p>
<p dir="ltr">- அதிரூபன்</p>
Anonymoushttp://www.blogger.com/profile/03580356280928510123noreply@blogger.com0