Tuesday 29 March 2016

சவ அறை

என் அறையின் முகத்தில் சவவாசணை

- - - - - - -

நீங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
ஒரு தற்கொலையின் கயிற்றில்
ஒரு பிணம் வாய்திறக்கிறது

அது,
என் ஆதிநாவின் இறுதிமொழியை
அறைசுவர்களில் முகங்களில் பூசுகிறது

என் வாழ்நாள் சூன்யத்தை
ஒரு கடிதத்தில் நிறப்புவதுதான்
தற்கொலையின் சுவையென நினைக்கிறேன்

எல்லா ரகசியங்களையும்
ஒரு காகிதத்தில் தெரிந்துகொள்ள இருக்கிற நீங்கள்
ஆழ்மன வீரியம் மிக்கவர்தான்

மனம் வலித்து அழுகிற
கடைசியத் துளியின் இருப்பு
தற்கொலையாகத்தான் இருக்கிறது
ஒருபோதும் வாழ்வின் நீதியை
இந்தக்கயிறு ஏற்றுக்கொள்ளாது

அநீதிகளின் கசப்புத்தன்மையில்
ஒரு விஷமிடர் கலந்திருப்பது
மரணத்தை சுவைக்கத்தான்

யாமம் அச்சுறுத்துகிற
இந்தப்பேய்யிரவின் பம்மிய வெளிச்சத்தில்
என் ஆன்மா அலைந்து திரிவதை
நீங்கள் காணக்கூடும்

அது
உணர்த்துகிற பயத்தின் உச்சம்
உங்கள் உயிர் பற்றிய
இருதயத்துடிப்பு தான்

கழிவறையின் நூலாம்படையில் தொங்கிக்கொண்டிருக்கிற
எட்டுக்கால் பூச்சியின் வயிற்றுப்பகுதியில்
என் ஆன்மா மறைந்தே வாழும்

கொஞ்சம் பொறுத்திருங்கள்

இலைகள் சருகாகும் காலத்திற்குள்
ஒரு கட்டில் உதைக்கப்படும்
கதவுகள் உடைக்கப்படும்

- அதிரூபன்

No comments:

Post a Comment