Friday 12 February 2016

நேத்ரா

@ ஞாலத்தின் முந்தைய பிரதி அவள் @

இருட்டறை கொண்ட தேசத்தில்
ஒரு ஆசுவாச நிழலில்
மர்மத்திமிர் அடங்கிய காலத்தில்
ஆதாந்திர வனபூமியில்
பனிவீசும் சுதந்திர ராத்திரியில்
விண்மீனின் உடன்பெறாத பெண்மீன் ஒருத்தி
கள்ளிப்பால் கலந்திடாத கர்ப்பத்தில்
கருஉற்றிருக்கிறாள்.

ஆண்பூவின் சார் பிழிந்து வடிந்த
எச்சிலின் கர்பத்தில்
ஒரு பொக்கிஷஅழகி
உயிர் பெற்றிருக்கிறாள்

இச்சென்மத்தின் என் விளங்கியசெயல்
இப்பேரண்ட பதுமையை
காண நேர்ந்ததே ஆகும்.

இவள் அனாமிகாவின் காதலியான நேத்ராவின் தோழி
என் அந்தரங்கத்தை குளிர்விக்க இருக்கும் சகாயி.

இவளது பருவநிலை மாற்றங்கள்
ஆடையிலிருந்து நிர்வாணமாய்
ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள் அமர்ந்து
ஒழுங்கை கற்பிக்கிறாள்அல்லது கற்கிறாள்.

இவளது மேனிப்பூவை சூட இயன்று
படர்ந்த மனத்தின்போது
என் தரிசுக்கூந்தலில்
பேன்களெல்லாம் பூக்களாக்கி பெரும்நறுமணத்தை யாசிக்கவைத்தாள்.

யுவதிக்காலபசி என்ற பித்தநோயை
ஒரு குளிராத இருளில் ஆடைகளுக்குள் அணைத்து மருந்தளித்தாள்.

என் செய்சொற்கைகள் யாவும்
இவளது நகத்தீண்டல் கட்டளையின்கீழ்
ஒருமாதிரியான வரிசையில்
சுமூகமாக சங்கமித்தன.

இவள் பெருங்கற்பனையில் வரைந்த சிற்பம்
பேரொப்பனையில் உருவான கர்ப்பம்
ஐநூறுமுறை புணற விரும்பும்
புணர்காலப்பசியில்
பாதுகாக்கப்பட்ட புணர்பண்டம்

சொற்க்களுக்குள் நுட்பமாக்கிய இவளை
யாருமறியாத ஒரு பெயர்பட்டியலில் செருகி
கொஞ்சம்கொஞ்சமாய் காதல் செய்யவேண்டும்
கொஞ்சம் அதிகமாய் காமம் செய்யவேண்டும்..

-அதிரூபன்

No comments:

Post a Comment