Wednesday 24 February 2016

இளைப்பாறுதலுக்கு இடையில் கவிதைகள்

சிறகுகள் உதிர்த்தக் கவிதைகள்

- - - - - - - - - - -

கலை,இலக்கியம் எல்லாம் நாம் விரும்பி வாழ்கிற வாழ்க்கையைவிட மேலானது, என்கிற ஆதிரையின் வரிகளில் தற்கணம் அமர்ந்துபார்க்கிறேன்.

புலன்வெளி உட்புகுகிற எல்லாம் கலை தீண்டிவந்த காற்றின் வாசம்தான்.

நாம் கண்டுபிடித்த ஒன்றை, ஒன்றின் உண்மையை, அதன்மீது வரைந்த  கற்பனையை, அகவெளிப் பார்வையில் பயணப்படுத்தியிருக்கிற நம்வெளியை, ஒரு காகிதமனமாக மாற்றி அமைக்க மெனக்கடும் போதுதான் எழுத்தின்வெளி திறக்கிறது.

மன அதிர்வுக்குள் நாம் உணரக்கூடிய மாயகணத்தின் பிம்பங்கள், தனக்கு புலப்படாத ஒன்றோடு ரகசியம் பேசி வளர்கிறது.

இந்தப்புலப்படாத ஒன்றின் உணர்வு, மொழியில் பிரவேசிக்கும்போது எழுத்து உதிர்கிறது.

ஒரு காட்சியை அப்பட்டமாக எழுத்தாக்க முயலும்போது, எழுத்து ஒன்றை அனுபவிக்கிறது.
அந்த எழுத்தின் அனுபவம் தான் படைப்பாளியின் பார்வையில் வடிவமாக வெளிவருகிறது.

ஜூமானா ஹடாட் என்கிற லெபனான் பெண் கவிஞர்.
இவரது கவிதையொன்றை தமிழில் ந.ஜயபாஸ்கரன் " பிணம் " என்னும் தலைப்பில் மொழிபெய்த்திருக்கிறார்.

என்னுடைய சடலத்தை உற்றுப்பார்க்கிறேன்
எனக்கு நானே அழகாக இருப்பதாகவும் உணர்கிறேன்
  - என்று தொடங்குகிற இந்தக்கவிதை அதன் வெறுமையின் பிடியில் நின்றுகொண்டு பேசுகிறது.

தான் அல்லாது தனக்குச் சம்பந்தப்பட்ட தன் உடலின் ஊர்வலத்தை அழகென பார்க்கிறது

எனது பிரேதம் ஒரு கம்பி
எனது ஈமச்சடங்கில் ஒரு நடனம் இருக்கும்
ஒவ்வொரு வாய்க்கும் ஒரு வார்த்தை இருக்கும்

அகாலத்தின் வெளியிலிருந்து பார்க்கிற, உயிர்கூடொன்றின் கடைசிய ஊர்வலத்தின் நாக்குகளை, ஜூமானா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

அவரில்லாது போன அவருக்குச் சம்பந்தப்பட்ட அந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிற, ஐம்புலன்களின் தேடல்தான் இந்தக்கவிதை.

" அன்னையின் வயிறு போன்ற குன்றில்
அவர்கள் கருணையின்றி ஏற அல்லது இறங்க வேண்டியிருக்கும் "

இந்த வரிதான் அந்தப் பிணத்துக்காரியின் ஆன்மா உணர்ந்த அசல் நினைவு.
கவிதைக்கு உள்ளும் கவிதைக்கு வெளியிலும் ஆன்மா வந்து செல்கிற பாதையை இந்த எழுத்து தீர்மானித்திற்கிறது.

கவிதைக்குள், வரிகளின் இருப்பிடம் இதுதான்.
இந்த வரிகளாலே படைப்பாளி பேசப்படுகிறான்.

மொழிபெயர்ப்பின் வீரியம் கவிதை மீது படர்ந்து, வாசகமனதை பிய்த்தெரிகிறது.

தேன்மொழி தாஸ் எழுதிய "காட்டோடு உலாவுதல்"

நவீன மனதில் மொழியின் வேரூன்றி படர்ந்து, கற்பனையின்  கைபிடித்து வளரும் பெருங்காடொன்றில் " கவிதையின் தேடலை " கவிதையால் உணருகிற ஒரு மாயகண எழுத்துதான் இந்தக்கவிதையின் அடர்த்தி.

" ஆலி மழை பெய்யும் தூவானக்காடு "
- கவிதையின் ஆரம்ப வரிகளுக்குள்ளே மனம் நின்றுகொண்டிருக்கிறது.

உறைந்த மழையின் பண்டகச்சாலை
மழைக்காட்டில் பேசும் மரம்
இலையும் கிளையும் வேர்களுமின்றி மழைக்காட்டில் பவளநிறத்தில் பூத்துக்கிடக்கும் உலகின் மிகப்பெரிய அதிசயப் பூவின் பெயர்.

இந்த மாதிரியான வரிகளுக்களினாலே கவிதைக்குள் ஆன்மா வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஒருப்பெருங்காடு வழி காதலோடு ஒளிந்திருப்பவனை கவிதைக்குள் தேடி, காட்டோடு உலவுகிற கொண்டாட்டம் தான் படைப்பாளியின் கவிதைப்போக்கு.

இதுவரையிலும் மொழிமேல் ஏறாத வரிகளின் வீரியம்தான், இந்த எழுத்திலும் தெரிகிறது.
மொழிக்குள்ளே உருவாகிக் கொண்டிருக்கிற தேன்மொழி தாஸ் க்கு என் பிரியங்கள் .

"மருதாணிக் காடுகளின் உன்மத்தம்" சுஜாதா செல்வராஜ் அவர்களின் கவிதைத் தாண்டவம் இதுதான்.

ஆதிக் கனவுகளை திருத்தி எழுதிக்கொண்ட முனை மழுங்கியப் பேனாக்கள்.

ஆதிக்கனவு என்கிற வார்த்தைக்குள் மறைந்திருக்கிற நேற்றைய நாளின் ரகசியம் தேடி செவி நீட்டுகின்றன என் புலன்கள்.

வவ்வால்களின் இரைச்சல் அற்ற
நீண்ட மிகுந்த இரவும்
முதல் தாயின் மார் பற்றி வளரும் பகல்களும்
- இந்த எழுத்து எல்லா வாசகனும் கொண்டாடக்கூடிய ஒன்று.

படைப்பால் பயனுறுகிற வாசகமனம் , படைப்பாளியின் எழுத்துத் தழுவலோடு பயணிப்பதென்பது, இந்த மாதிரியான வரிகளால் அவர்கள் கொண்டாட்டத்தை உணரும் போதுதான்.

மருதாணிக்காடு, உன்மத்த வாசனை
- இந்த வார்த்தைகளெல்லாம் கவிஞனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

குற்றேவல் சதிரின் 64விதிகள், இளஞ்சேரல் அண்ணாவின் கவிதை.

உலகம் சார்ந்து பேசுகிற, இந்த பிரபஞ்சத்தோடு இயங்குகிற கவிதை வரிகள்.

"" தோல்வியை ஒப்புக்கொண்டு
   ஆட்டத்தை பாதியில் முடித்துக்கொள்கிற தேசங்களால்
   பல சிப்பாய்களும் பொதுமக்களும் காப்பாற்றப்படுகின்றனர் ""

கவிதையிலிருந்து இந்த வரிகளை மட்டும் எடுத்து, எல்லா மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து, உலகம் வியந்துபார்க்கக்கூடிய ஒரு உண்மையின் வீரியம் நிறைந்திருக்கிறது.

காட்சியும் சூழலும் கணமும் தீர்மானிக்கிற கவிதைகளைத்தாண்டி, மானுட இயல்பை பேசிகிற மொழிதான் 'இளஞ்சேரல்' .

இளஞ்சேரல், இயல்பாகவே அவருக்குள்  ஒரு உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் இயங்கக்கூடிய எழுத்துமனம் தான் இளஞ்சேரலை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மாநூடம் சார்ந்து பேசுகிற இயல்பான மனசு, சமகாலத்திற்கு தேவையான எழுத்து வழக்கு,
முடிந்த அளவில் தனக்குத்தானே நேர்மையாய் இருக்கிற இளஞ்சேரலுக்கு என் அடர்பிரியங்கள்.

முகமது காக்கி கவிதைகளில் ஒன்று வண்ணத்துப்பூச்சி துயில் . ந.ஜயபாஸ்கரன் மொழிபெயர்த்தது. உலகின் எல்லாக் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் ஒரு சிறு ஒற்றுமை இருக்கிறது.
ஈராக்கில் வாழ்ந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்ட நேற்றைய காலத்து சிந்தனைகள், சமகாலத்தில் சக படைப்பாளர்களிடம் தெரிகிறது.

" வண்ணத்துப்பூச்சிகளே
மென்மையாக சிறகடியுங்கள் "
- இந்தமாதிரியெல்லாம் பேசித்திரிய கவிஞர்களால் தான் முடிகிறது.

மொழிபெயர்ப்பில் இருந்து மொழி பிசகாமல் நம்மொழி பேசுகிற இந்தக் கவிதைகளின் அழகே, இதை தமிழில் கொண்டுவந்த ஜயபாஸ்கரனின் வீரியம் தான்.

" என் மகளின் விழிகளில் துயில்கிற
அரேபிய மான்களை திடுக்கிடச் செய்து விடுவீர்கள் "

விழிகளுக்குள் வேறுஉயிர் துயில்கிறதன் ரகசியம் பேசிவளர்கிற கவிதை, கனவு என்ற ஒன்றை மறக்கடித்ததன் பொருள், இந்தவரியை அழகுபிசகாமல் எழுதித்தீர்த்த கவிஞனின் விரல்கள் தான் ஒரு குழந்தையின் கனவில் கிச்சுக்கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறது.

நவீனம் சார்ந்த எழுத்து, நவீனம் சார்ந்த கவிதை, நவீனத்தின் பெயர்ப்புகளில் சிதறிய இதழ் துண்டுகள், எல்லாமே இங்கு புதிதுதான்.

நவீனத்தனமான வாழ்வு, நவீனத்தனமான சூழல், நவீனத்தின் சாயலில் உயிர்கள், நவீனத்தில் வாயில் உறைந்துபோய் கிடக்கிற மொழியின் நுரைகள், கவிதையினாலும் பேச்சினாலும் சமகாலத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி வருகிற மொழிநடைகள், வாழ்தலெனும் இயல்புக்குள் நவீனத்தின் நாவுகள் வளர்ந்து கிடக்கிற வளர்ச்சிகள், எல்லாமே மானுடப்பார்வையிலிருந்து மனிதப்புத்திக்குள்ளிருந்து, வேறு ஒன்றின் இருப்பை அடையவிரும்புகிற சாதாரண உயிர்களின் நிகழ்காலச் சூன்யம் தான்.

வலசை இதழின் படைப்புகள் எல்லாக்காலத்தின் வளர்ச்சியைப் பற்றியும் சிந்திக்கிறபோக்கு நிறைந்தது.

மஜித் நஃபிஸி எழுதிய ஒரு கவிதையின் கடைசி வரிகள் " தண்ணீர் விற்பவர்கள் சந்துக்களில் கூவிச்செல்கின்றனர்
புத்தம்புதிய இரத்தம்.!புத்தம் புதிய இரத்தம்.!

இன்னும் நூறுஆண்டுகள் கடந்தும்,நாளைய சமகாலத்தில் பேசித்திரிகிற உண்மைதான் இந்தக்கவிதை.

எல்லா காலத்துக்கும் உறியவன் தான் கவிஞன். அவன் தனதாக்கி கொள்கிற எழுத்தின் பெயர்ப்புகளில் நாளைய நிஜம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிற , அவனின் மனப்போக்குகளில் வாசகமனம் கவர்ந்துசெல்ல, அகத்தின் தூய்மையை பிரதிபலிக்கிற வலசை இதழுக்கும் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்..

- அதிரூபன்

Tuesday 16 February 2016

காடு வழி செல்கிற திசை

காடு வழி செல்கிற நடைப்பயணம் அலாதியானது.

நமக்கான நெருக்கத்தை இந்த மரங்களின் காதுகளுக்குள் இறைக்கிற சௌகர்யம், அதுபோலோரு புதிய இயல் எந்த அறிவிலும் படரவில்லைதான்.

ஐம்புலனுக்கும் நெருக்கமான ஒரு தாகத்தை இந்தக்காடு நமக்கு வழங்குகிறது. கண்களுக்கான ரகசியத்தைப் பத்தரப்படுத்திவருகிறது.

வனம், வானம், இசை, கனவு, ஒருபிடிமூச்சு , ஆழ்ந்த தூக்கத்தில் சாவு
இந்த மாதிரியான ஒரு பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் லயித்துப்போயிருந்தால், இந்த தேசம் ஒரு மூங்கில் காட்டின் இசைச்சுவையை போல் ரசனை மிகுதியாய் இருந்திருக்கும்.

மீன்களுக்கு முத்தமிடுகிற இருபிஞ்சுஉதடுகளின் ஆசையைப்போலத்தான், நான் வனத்தினுள் வாழநினைக்கிறப் பிரியமும்.

நான் கண்டிடாத ஒரு வனலோகம் எந்தப்பறவையின் எச்சத்தில் விளைந்ததோ...!!

மலைக்காடொன்றின் உச்சியில் மேகத்தை மோதிமோதி விளையாடும் என் கைவிரல்களில், ஒரு மழை அதன் முதல்துளியை இட்டுநிரப்பி, பின் புவிஈர்ப்புக்குள் நுழைகிற ஒரு பிரியம் எத்தனைஎத்தனை வாழ்தலானது...!

இந்தக்காட்டின் எல்லையெங்கும் என் அகப்பார்வையின் ரேகைகள் தான்.
இந்தக்காட்டின் வாசமெல்லாம்
என் புலன்தீண்டிய காற்றின் சுவை தான்.

காடுவிட்டு காடுசெல்ல ஒரு பறவையின் வால் பிடித்து நடப்பதென்பது, எந்த மாதிரியான பைத்தியக்காரத்தனம்..?!
அந்த பைத்தியப்பித்து தானே எனக்கும் வாய்த்திருக்கிறது.

இந்தவனத்தினுள் நான் தேடி அழைகிற என் பிரமிப்பின் லயிப்பு, எந்த மரத்தின் கதைகளை படித்துக்கொண்டு எந்த வானத்தில் பறக்கிறதோ..?

நான் வரைந்த என் கற்பனையின் காட்டில், எந்த மிருகமும் ஆறாம்அறிவை கொன்று சமைக்காது.

என் லென்ஸ்விழிகள்
ஒரு நிர்வாண மரத்தில்,
இரு பறவைகள் பரிமாறிக்கொண்டிருக்கிற காமத்தை விழுங்குகிறது.

இந்த காமத்தின் ஆடையில் எந்தக் கந்தலும் இல்லை.

நிர்வாணத்தின் ரகசியம் பேசுகிறது நான் வாழநினைக்கிற காடு.

புலன்வழி இறங்குகிற காட்டின் ரகசியங்களில் எல்லாம்,
இசை மிதக்கிறது.

இலை முறிவொன்றில் பிறக்கிற சத்தத்தில், காட்டின் உயிர்கள் இசையை உணர்கின்றன.

இசைத்ததும்புகிற ஒரு நிறைகுடக்காடு யானையின் குளியலில் இருந்து ஒவ்வொரு துளியாய் தரை நனைக்குகிறது.

பிசுரு தட்டியக் காட்டின் பாதைகளில் ஒரு குட்டிமுயலின் தடங்கள் தெரிகிறது.
நான்கு விரல்களின் முகங்கள் சருகில்லாத மணல்வெளியில் நம்மை பார்த்து சிரிக்கின்றன.

இந்த வாழ்வு ஒரு வனத்துக்கானது.
இந்த வனம் ஒரு வாழ்வுக்கானது.

பிரபஞ்சப்பெருவெளியில் இருந்து ஒரு வனநிழலில் வாழ்ந்துபார்ப்பதென்பது, என் வாழ்நாள் பூரணம் அல்லவா..

என் பிறப்பின் ரகசியங்களை
வனங்களின் காதுகளுக்குள் இறங்கிப் பேச,
நான் ஆதிமனிதனை தழுவ வேண்டியுள்ளது.

நான் ஆதியின் மிச்சம்.

என் வாழ்வு தரும் ஒரு மகர்ந்தத்தை
காட்டின் வயதோடு ஒப்பிட்டு மகிழ
ஒரு வனப்பிரதேசத்தின் இருட்டில் கரைந்து
இனி நானும் மறைவிடமாவேன்..!!

- அதிரூபன்

Friday 12 February 2016

நேத்ரா

@ ஞாலத்தின் முந்தைய பிரதி அவள் @

இருட்டறை கொண்ட தேசத்தில்
ஒரு ஆசுவாச நிழலில்
மர்மத்திமிர் அடங்கிய காலத்தில்
ஆதாந்திர வனபூமியில்
பனிவீசும் சுதந்திர ராத்திரியில்
விண்மீனின் உடன்பெறாத பெண்மீன் ஒருத்தி
கள்ளிப்பால் கலந்திடாத கர்ப்பத்தில்
கருஉற்றிருக்கிறாள்.

ஆண்பூவின் சார் பிழிந்து வடிந்த
எச்சிலின் கர்பத்தில்
ஒரு பொக்கிஷஅழகி
உயிர் பெற்றிருக்கிறாள்

இச்சென்மத்தின் என் விளங்கியசெயல்
இப்பேரண்ட பதுமையை
காண நேர்ந்ததே ஆகும்.

இவள் அனாமிகாவின் காதலியான நேத்ராவின் தோழி
என் அந்தரங்கத்தை குளிர்விக்க இருக்கும் சகாயி.

இவளது பருவநிலை மாற்றங்கள்
ஆடையிலிருந்து நிர்வாணமாய்
ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள் அமர்ந்து
ஒழுங்கை கற்பிக்கிறாள்அல்லது கற்கிறாள்.

இவளது மேனிப்பூவை சூட இயன்று
படர்ந்த மனத்தின்போது
என் தரிசுக்கூந்தலில்
பேன்களெல்லாம் பூக்களாக்கி பெரும்நறுமணத்தை யாசிக்கவைத்தாள்.

யுவதிக்காலபசி என்ற பித்தநோயை
ஒரு குளிராத இருளில் ஆடைகளுக்குள் அணைத்து மருந்தளித்தாள்.

என் செய்சொற்கைகள் யாவும்
இவளது நகத்தீண்டல் கட்டளையின்கீழ்
ஒருமாதிரியான வரிசையில்
சுமூகமாக சங்கமித்தன.

இவள் பெருங்கற்பனையில் வரைந்த சிற்பம்
பேரொப்பனையில் உருவான கர்ப்பம்
ஐநூறுமுறை புணற விரும்பும்
புணர்காலப்பசியில்
பாதுகாக்கப்பட்ட புணர்பண்டம்

சொற்க்களுக்குள் நுட்பமாக்கிய இவளை
யாருமறியாத ஒரு பெயர்பட்டியலில் செருகி
கொஞ்சம்கொஞ்சமாய் காதல் செய்யவேண்டும்
கொஞ்சம் அதிகமாய் காமம் செய்யவேண்டும்..

-அதிரூபன்

நேத்ரா

@ ஞாலத்தின் முந்தைய பிரதி அவள் @

இருட்டறை கொண்ட தேசத்தில்
ஒரு ஆசுவாச நிழலில்
மர்மத்திமிர் அடங்கிய காலத்தில்
ஆதாந்திர வனபூமியில்
பனிவீசும் சுதந்திர ராத்திரியில்
விண்மீனின் உடன்பெறாத பெண்மீன் ஒருத்தி
கள்ளிப்பால் கலந்திடாத கர்ப்பத்தில்
கருஉற்றிருக்கிறாள்.

ஆண்பூவின் சார் பிழிந்து வடிந்த
எச்சிலின் கர்பத்தில்
ஒரு பொக்கிஷஅழகி
உயிர் பெற்றிருக்கிறாள்

இச்சென்மத்தின் என் விளங்கியசெயல்
இப்பேரண்ட பதுமையை
காண நேர்ந்ததே ஆகும்.

இவள் அனாமிகாவின் காதலியான நேத்ராவின் தோழி
என் அந்தரங்கத்தை குளிர்விக்க இருக்கும் சகாயி.

இவளது பருவநிலை மாற்றங்கள்
ஆடையிலிருந்து நிர்வாணமாய்
ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள் அமர்ந்து
ஒழுங்கை கற்பிக்கிறாள்அல்லது கற்கிறாள்.

இவளது மேனிப்பூவை சூட இயன்று
படர்ந்த மனத்தின்போது
என் தரிசுக்கூந்தலில்
பேன்களெல்லாம் பூக்களாக்கி பெரும்நறுமணத்தை யாசிக்கவைத்தாள்.

யுவதிக்காலபசி என்ற பித்தநோயை
ஒரு குளிராத இருளில் ஆடைகளுக்குள் அணைத்து மருந்தளித்தாள்.

என் செய்சொற்கைகள் யாவும்
இவளது நகத்தீண்டல் கட்டளையின்கீழ்
ஒருமாதிரியான வரிசையில்
சுமூகமாக சங்கமித்தன.

இவள் பெருங்கற்பனையில் வரைந்த சிற்பம்
பேரொப்பனையில் உருவான கர்ப்பம்
ஐநூறுமுறை புணற விரும்பும்
புணர்காலப்பசியில்
பாதுகாக்கப்பட்ட புணர்பண்டம்

சொற்க்களுக்குள் நுட்பமாக்கிய இவளை
யாருமறியாத ஒரு பெயர்பட்டியலில் செருகி
கொஞ்சம்கொஞ்சமாய் காதல் செய்யவேண்டும்
கொஞ்சம் அதிகமாய் காமம் செய்யவேண்டும்..

-அதிரூபன்

Sunday 7 February 2016

கற்பனை மீதொரு கடல் வரைய

என்னை இயங்கவிடாமல் செய்கிற க.வை.யின் "ஆதிரை"

-----------------

யாவரும் நுழையவிரும்புகிற புரிதல்களுக்குள் தான் ஆதிரை கூட்டிச்செல்கிறது.எத்தனை விதமான கற்பிதங்கள். எந்த மாதிரியான போதனைகள். யாவற்றிலும் வியந்துகிடக்கிறேன் க.வை.ஐயா.

நீங்கள் வாழ்ந்துமுடித்திருக்கிற ஆதிரையின் இல்லத்தில் இப்போதுதான் நுழைந்தவனானேன். இந்த மானுடப்பயலுக்கான வீரியம் ததும்பி நிறைகுடமாகிக்கிடப்பதை உங்களால் அறிந்துகொண்ட தற்கணம் நான் ஏதுமற்றவனாகிறேன்.

உங்கள் மனப்போக்கு அதற்கான வெளியில், தன்னில்லாத தன் மன உருவை எங்கெங்கிலும் பயணிக்க நினைக்கிறது. உங்கள் ஆளுமைத்திறனில் தான் எத்தனை ஆச்சர்யம்!

ஒரு நிகழ்வுக்குள்ளே ஆன்மாவிற்கும் உருகொடுக்கிற உங்கள் கற்பனைத்திறனில், என் அழகியகணங்களை அமர்த்திப்பார்க்கிறேன். பிறந்த குழந்தை பேசுகிற மொழியின் தூய்மை நிறைந்துகிடக்கிறது.

உங்களால் நான் கற்றுக்கொண்ட என்வெளியின் புதியபாதைகளில், பயணங்களுக்கு இனி குறைவில்லை. உங்கள் புரிதல்களும் உள்வாங்கும் திறனும் எப்பொழுதும் எங்களை ஆச்சர்யத்தின் எல்லைவரை அழைத்துச்செல்கிறது.

சாதாரண காட்சிகளை, உங்கள் எழுத்தும் மனமும் ஒன்றி வெளிக்காட்டுகிற ஒரு படிமம், புதியவெளியொன்றை உருவாக்குகிறது.அந்த வெளிதான் யாவரும் வியக்கும் வண்ணம் ஆகிறது.

ஆதிரையிலிருந்து நான்  லயித்துக்கிடக்கிற ஜென்மசாசனங்கள் மூன்று.
" வனம் இசை கனவு "

இந்தமூன்று பிரபஞ்சமும், என்இருப்பை தனதாக்கிக்கொண்டன. அதன் உலகில் நான் எனப்படுகிற ஒரு இயல், கொஞ்சமும் எனக்குத் தோன்றவில்லை. இப்போதெல்லாம் வனத்தின் மீதும் இசையின் மீதும் அதீதக் காதல் கொள்கிறேன். என் நிழல்படாத வனலோகத்தின் வெளி நான் பிறந்துபார்த்ததாய் உணர்கிறேன். என் வனமெங்கும் உங்கள்முகம் தான்.

இந்த எழுத்துக்குமுன், நான் துளிதூசிக்கூட கிடையாது என்பதே உண்மை. எப்போதுமே வாசிக்கநினைக்கிற ஒரு காகிதமனம் இந்த ஆதிரை. நான் என நம்பப்படுகிறது எனக்கும் என்மீது இப்போது நம்பிக்கையே கிடையாது. என்னையும் மறைபொருளாக்கி பார்க்கத் தூண்டிகிறது இந்த ஆதிரை.

"உயிர்களின் சத்தம் சத்தியமாய் இசையே"

நினைக்கநினைக்க செவிகளுக்குள் இறங்குகிற எழுத்தோசையில், உங்களது சிரிப்புச்சத்தம் புலப்படுகிறது. இதற்கு முன் ஒன்றுமே கிடையாது. மானுடச்சத்தி நினைத்து நெகிழ்ந்துகோகிறேன். நான் ஏதும் இல்லாதவனாய் உணர்கிறேன்.

"பறத்தலுக்கு முந்தைய கணத்திலான பறவையின் இருப்பு"

" நான் அவனை நெருக்கமாக உணர்கிறேன். என் வீட்டில் நுழைவது போலவும்,என் சட்டையை அணிவதுபோலான நெருக்கம் "

ஒரு உயிரின் இருப்பை காட்சிப்படுத்துகிற உங்களது எழுத்து வீரியத்தில்தான் , தற்கணம் நான் அமர்ந்திருக்கிறேன். மறை போதிக்கிற ஒரு உணர்வை தீண்டித்தீண்டி திக்குமுக்கடைகிறேன்.

காற்றுக்கும் உருவம் கொடுக்கிற ஒருமனசு தானே உங்கள் எழுத்து. அதை நம்பித்தானே தீரவேண்டும். உங்கள் கற்பிதங்களுக்குள்ளே புலப்படாத காட்சியும் புலப்படுகிற வெளியும் எங்களை நம்பச்சொல்கிற ஒரு மறையுண்மையைத்தானே முதலில் கற்றுக்கொண்டோம்.

"மௌனம் இறுகி அழுகை உறைந்தது"

என்னமாதிரியான வார்த்தைகள் இது!!!
"அழுகை உறைந்தது" இதன் முகத்தை தேடித்தேடி புலப்படாத ஒரு எல்லையில் தனிநிழலாகிப்போனேன். இந்த எழுத்துச் சட்டகத்திற்குள் மனிதப்பூரணத்தைவிட மேலோங்குகிற ஒரு எழுத்துச்சுகம் ஏற்படுத்திய மகிழ்வை, வேறெதுவோடும் ஒப்பிட முடியாது தான்.

நான் நான் நானெனச்சொல்ல இனி ஒரு முடிஅளவுகூட ஒன்றும் கிடையாது. நான், உடல் துறந்ததும் உயிர் திறந்ததும் இந்த ஆதிரையெனும் ஆதிதீண்டலுக்குள் தான்.

என் மனபிம்பத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிற "" ஆதிரையாகிப்போக, க.வை.பழனிச்சாமி என்கிற தனிமனித எழுத்துப்பிரபஞ்சம் எந்தளவிலும் எதற்கும் அதனழகில் நிகராகிப்போகாது .

இன்னும் கோடி நெகிழ்வுகள் உங்கள் வார்த்தைகளுக்குள் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அது, நட்சத்திரங்கள் போலவும் , மழைத்துளிகள் போலவும் எண்ணமுடியாத அழகாக இருத்தலையே வேண்டுகிறேன்.

"அனுபவம் கலையாகும் ரஸவாதம் கலைஞனின் மறைவிடம்"

இந்த தீர்க்கமான மறைவிடம்தான் உங்கள் இருப்பிடம். கலைஞனுக்கான மறைவிடம் அவன் பெயர்சொல்கிற கலையே. எழுத்துச்சுகம் ஏற்படுத்திய என் சுதந்திரம் எல்லாம்,  உங்கள் எழுத்து ஏற்படுத்துகிற உணர்வின் பிம்பம் தான்.

இனி சொல்வதற்கு ஏதுமில்லை. எந்தகணமும் தலையில் தூக்கிவைத்து வானம்வரைக் கொண்டாட, இந்த எழுத்தில் லயித்துப்போய்விட்டேன் ...

மகிழ்ச்சியும் நன்றியும்

- அதிரூபன்