Monday 21 December 2015

உயிரே

சுஜாதாவ நான் காதலிக்கிறேன்

--------------------

ராத்திரி நேரம்
RAILWAY STATION
அவ தனியா காத்திருந்தா

அங்க வரவேண்டியது ஒரு ட்ரென்
ஆனா, வந்தது ஒரு கடும்புயல்

விளையாட்டுப்பையன் மேல
மின்னல் குறுக்க ஒட
ஆகாயம் நடுங்கி கிடுகிடுத்தது

மூங்கிலும் தென்னமரமும் வயல்வெளியும் சாமிஆட,
தகரகதவ நடனமாடவச்சு..

ச்சோசோ ... னு ,
பெய்யுது மழை

இந்த புயலுக்கு நடுவுல
Platform-க்கு இன்னொரு பக்கத்துல
பச்சையா இருட்டுல ஒரு ஆளோட உருவத்த பாத்தான்

அண்ணே ...., தீப்பெட்டி இருக்கா தீப்பெட்டி .?

அப்ப அடுச்ச காத்துல
அவ போர்த்தி இருந்த கருப்பு போர்வை பறந்துபோச்சு,
அப்பதான் தெரிஞ்சது
அது
ஒரு
பொண்ணு

கருவிழி..
பாத்துக்கிட்டே இருக்கலாம்..
உதட்டோரத்துல புன்னகை..
சின்னதா மூக்கு, அவசரத்துல பொருத்திவச்ச மாதிரி..

ஆனா .. அழகி.. !

பாத்தவுடனே வில்லன்கிட்ட இருந்து அவள காப்பாத்தி,
குதிரமேல அவள ஏத்திட்டு எங்கயாது கூட்டிட்டு போய்டனும்னு துடிச்சான் தவிச்சான்.
.
.
.
மன்னுச்சுக்கோங்க
நான் ஒரு மடையன்
ஆம்பளைனு நெனச்சு உங்ககிட்ட தீப்பெட்டி கேட்டேன்.

அதுக்கு பதில் ஒன்னுமில்ல
வெறும் ..பார்வை..

உம்ம்னு இருக்கிங்களே சிரிக்கமாட்டிங்களா .?
ஏதாது கேட்கமாட்டிங்களா .?

சிகரெட் ...
SORRY ...

அப்படியே , முத்து உதிந்தமாதிரி அவ என்கிட்ட ஒன்னு கேட்டா .
ச்சாயா ...

ரெண்டு பூப்போட்ட கிளாஸ்ல
சூடா டீ எடுத்துக்கிட்டு,
அய்யோ சிந்தீரக்கூடாதேனு
மூச்சு வாங்க வேகமா ஓடினான்.

ட்ரைன்தான்.
ரயில்வேஸ்டேசன்ல நிக்கிறது கௌரவக்கொறச்சல்னு,
கோவிச்சுக்கிட்டு கெம்பீடுச்சு .

ட்ரென் இப்போ கிளம்ப போது

அது,
அவ ட்ரைனோ அவ ட்ரைனோ
அவக்கூட போய்டு .

அவசரப்பட்டு பச்சக்கொடிய வேற காட்டிட்டாரு
இன்னும் வேகமா ஓடுறான்

உஷ்ஷ்..

ட்ரென் போய்டுச்சு
அவளும் போய்ட்டா .

ஓய்ய்ய்.........

- சுஜாதா

No comments:

Post a Comment