Saturday 26 December 2015

வெய்யில் தேசம்

அது ஒரு வெய்யில் தேசம்

நிறங்களின் ஊடே
சலனங்களை ஏற்படுத்திச்செல்லும்
அரூபத்தின் நிழலில்
நான் அமர்ந்திருக்கிறேன்

தாகத்தின் கடைசிய வாய்
ஒரு சொட்டுத்துளியை
என் குருதிக்குள் உறைத்துவைத்திருக்க,
பேரண்டம் விரும்பிய தாகமொன்று
என்னை விழுங்கியபடி
காய்ந்துகிடக்கிறது

பிரபஞ்சம் விரும்பும் பூரணதேசம்
இந்த வெய்யிலின் கையில்
தவழ்ந்து கொண்டிருக்க,
ஆதவனின் உதடுகள்
முத்தத்தை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது

மாமழையின் குட்டிகள்
வெய்யிலில் பூத்த வியர்வை கொப்பலங்களாய்,
தேகத்தின் மேலேறி உறங்கிக்கொண்டிருக்கிறது

பகலொன்றின் சிரிப்பில்
ஒன்றிரண்டு சூரியன்
கள்ளிஇலைகளையும்
சாம்பலாக்கி மகிழ்கின்றன

ஒரு வெய்யிலின் முத்தம்
என் நிழல்தொட்டு ஜூவன் செய்தால்,
இந்த பிரபஞ்சம்
அதற்கான ஆடையை உடுத்திவிடும் ..

Monday 21 December 2015

உயிரே

சுஜாதாவ நான் காதலிக்கிறேன்

--------------------

ராத்திரி நேரம்
RAILWAY STATION
அவ தனியா காத்திருந்தா

அங்க வரவேண்டியது ஒரு ட்ரென்
ஆனா, வந்தது ஒரு கடும்புயல்

விளையாட்டுப்பையன் மேல
மின்னல் குறுக்க ஒட
ஆகாயம் நடுங்கி கிடுகிடுத்தது

மூங்கிலும் தென்னமரமும் வயல்வெளியும் சாமிஆட,
தகரகதவ நடனமாடவச்சு..

ச்சோசோ ... னு ,
பெய்யுது மழை

இந்த புயலுக்கு நடுவுல
Platform-க்கு இன்னொரு பக்கத்துல
பச்சையா இருட்டுல ஒரு ஆளோட உருவத்த பாத்தான்

அண்ணே ...., தீப்பெட்டி இருக்கா தீப்பெட்டி .?

அப்ப அடுச்ச காத்துல
அவ போர்த்தி இருந்த கருப்பு போர்வை பறந்துபோச்சு,
அப்பதான் தெரிஞ்சது
அது
ஒரு
பொண்ணு

கருவிழி..
பாத்துக்கிட்டே இருக்கலாம்..
உதட்டோரத்துல புன்னகை..
சின்னதா மூக்கு, அவசரத்துல பொருத்திவச்ச மாதிரி..

ஆனா .. அழகி.. !

பாத்தவுடனே வில்லன்கிட்ட இருந்து அவள காப்பாத்தி,
குதிரமேல அவள ஏத்திட்டு எங்கயாது கூட்டிட்டு போய்டனும்னு துடிச்சான் தவிச்சான்.
.
.
.
மன்னுச்சுக்கோங்க
நான் ஒரு மடையன்
ஆம்பளைனு நெனச்சு உங்ககிட்ட தீப்பெட்டி கேட்டேன்.

அதுக்கு பதில் ஒன்னுமில்ல
வெறும் ..பார்வை..

உம்ம்னு இருக்கிங்களே சிரிக்கமாட்டிங்களா .?
ஏதாது கேட்கமாட்டிங்களா .?

சிகரெட் ...
SORRY ...

அப்படியே , முத்து உதிந்தமாதிரி அவ என்கிட்ட ஒன்னு கேட்டா .
ச்சாயா ...

ரெண்டு பூப்போட்ட கிளாஸ்ல
சூடா டீ எடுத்துக்கிட்டு,
அய்யோ சிந்தீரக்கூடாதேனு
மூச்சு வாங்க வேகமா ஓடினான்.

ட்ரைன்தான்.
ரயில்வேஸ்டேசன்ல நிக்கிறது கௌரவக்கொறச்சல்னு,
கோவிச்சுக்கிட்டு கெம்பீடுச்சு .

ட்ரென் இப்போ கிளம்ப போது

அது,
அவ ட்ரைனோ அவ ட்ரைனோ
அவக்கூட போய்டு .

அவசரப்பட்டு பச்சக்கொடிய வேற காட்டிட்டாரு
இன்னும் வேகமா ஓடுறான்

உஷ்ஷ்..

ட்ரென் போய்டுச்சு
அவளும் போய்ட்டா .

ஓய்ய்ய்.........

- சுஜாதா

Monday 14 December 2015

காதல் என்பது ரசிக்ககூடிய பித்துநிலை

நாந்தான்.....
காதலப் பத்தி பேச வந்திடுக்கேன்.

காதலுங்கிற ஒரு வார்த்தை அல்லது ஒரு விஷயம்
எல்லாருக்குள்ளும் என்னென்ன கத்துதருது,
தனக்கான தன்னை எப்படி தட்டி உசுப்புது,
நமக்குள்ளே மறைஞ்சேஇருக்கிற ஏதோவொன்ன,
அந்தமறைபொருள
எப்படி உணரவைக்கிது னு நினச்சுப்பாக்கும் போதும்
உணர்ந்து பாக்கும் போதும்
ரொம்ப அழகா புன்னகைக்கிது மனசு.
கடலலைய பாத்துகிட்டு இருந்த நான் இப்பெல்லாம் ரசிக்க ஆரம்புச்சிட்டேன்,
மயிலிறகின் நிறங்களுக்குள்ளதான் எனக்கான ஒருத்திய
மறச்சுவச்சிடுக்கேனு
மனசுவிரும்பிற யாரோஒருத்திய அல்லது ஏதோ ஒன்ன நினைக்கும்போதெல்லாம்
வானவில்லின் ரேகைகள முகத்தில பூசிக்கிற மனோபாவம்தான் காதலுக்கான அஸ்த்திவாரம்னு நம்புறேன்.
காதலிக்கத்தான உருவம் தேவை,
காதல உணர மனசுபோதாதா அல்லது
ஒரு இரவின் விழித்தலோ , கருப்பு தனிமையோ போதாதா.
காதல காதலிக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு.
எனக்கானவொருத்தினு நான் சொல்லும்போது
அவ வானத்தில இருந்து குதிக்கப்போறவளா இருந்தா எவ்வளவு அழகா இருக்கும்.
இந்த மடமையலாம் காதல் ஏத்திக்கிடுது.
அவ இந்த உலகத்தில பிறக்கவே இல்ல, எனக்குள்ளேயே ஏதோவொன்னா மறைபொருளா மறஞ்சுக்கிட்ட சிலசமயம் இந்தமாதிரி பேசவைக்கிறா.
நான் அந்த உணர்வுக்குத்தான் அவள் னு பேரு வச்சிடுக்கேன். அவளத்தான் காதலுனு சொல்லி கூப்பிடுறேன்.
அவள் மறைபொருளா இருக்கிறதாலயே காதலிக்கிறேன்.
கட்டாயம் அவளுக்கு உருவம்கொடுத்து எந்த உடம்புக்குள்ளும் ஊடுருவமாட்டேன்.

காதலுங்கிற ஒரு வார்த்த
இல்ல,
Its something different
Its something special

அவளும் அவனும் இணைந்தது தானே இப்பிரபஞ்சப்பெருவெளி..
எவ்வளவு மெய்யான கூற்று க.வை.சார்.
அவள் அவனுக்கானவன்
அவன் அவளுக்கானவள்
இருவருமே இந்த உலகத்த புதுசா பாக்குறதுக்காகவும் உணர்றதுக்காகவுமே காதலிக்கிறாங்க.
காதல் ங்கிற ஒரு போதை மட்டுமே எல்லா உயிர்களும் உணரக்கூடிய மறைபொருள்.
உயிர்கள்மீது அன்புசெலுத்த ஆகச்சிறந்த அன்பே காதல்தான்.
ஒருவேல காதலுக்கும் அன்புக்கும் வித்தியாசம் இருக்கோ.!?
அதிகபடியான அன்புதான் காதல்னு நான் நினைக்கிறேன் நம்புறேன்.
காதலின்மொழி என்னவாஇருக்கும்.
மௌனமா .?
நிச்சயமா இருக்காது.
காதல்வந்து ஒரு பித்துநிலை.
பைத்தியக்காரனின் புலம்பலைத்தான் காதலுக்கான மொழியா வச்சுக்கலாம்.
ஆகச்சிறந்த அகத்துறவே காதல்தான.
புன்னகைய காதலிக்கிறது எவ்வளவு அழகான விஷயம். தெருக்கடைக்கு பக்கத்தில
ஒரு பிச்சைக்காரகுழந்தையின் புன்னகை அவ்வளவு அழகா இருக்கு.
அது அழுக்குபடிந்த புன்னகையா புறப்பார்வையில விழுந்தாலும்
அந்த புன்னகையோட அழக அகம்தான் நேசிக்கிது. அவ்வளவு காதலிக்கிறேன் அந்த புன்னகைய.
மயிலோட முடிகள எவ்வளவுக்குஎவ்ளோ நமக்குபிடிக்கிது,
நிலாவ எவ்வளவு ரசிச்சிடுக்கோம்,
குழந்தைங்கிற ஒரு வார்த்த நமக்குள்ள எவ்வளவு பரவசமூட்டுது,
கடல் கவிதை இசை ஓவியம் இதெல்லாம் நமக்கு எவ்வளவு பிரியத்த ஏற்படுத்துது.
இந்த பிரியம் ரசனைதான் காதல்னு நினைக்கிறேன்.
இப்போ பிரியம்வைத்த எல்லாமே காதல்தான். அப்ப காதலுங்கிறது அழகான விசயங்கள் மீதுதான் வருதா?
அழகுதான் காதலா ?
நாம எங்க தடுமாறி காதலுல விழுகிறோம்,அழகிலையா.?
அப்படிஇல்ல..
புறப்பார்வைகளில் விழுகிற அழகு எப்பவுமே அழகுதான்.
அழகுஇல்லாத ஒருவிசயத்தின் மீது காதல்வருகிறபோது
நாம உணர்ந்தோ உணரத்தெரியாமலோ
அந்த இடத்தில ஒரு தேடல்வருகிறது. அந்த தேடல் அகப்பார்வைகள்ல விழுகிறது. அகத்துறவு அந்த இடத்தில முளைக்கிறது. அந்த தேடல் மறைபொருளாவே இருந்து அகத்தில் அழகென படிந்த விசயத்தின்மீதோ உருவத்தின்மீதோ காதல்செய்கிறது.

பெண்ணின் மீதோ ஆணின் மீதோ ஏற்படுகிற காதல்
எவ்வளவு பரிசுத்தமானதா இருக்கும்னா,
உணர்தலில்தான் இருக்கிறது.
எவ்வளவோ சமூக பிரச்சனை, வீட்டுச்சூழ்நிலை, பணப்பிரச்சனை இருக்கிற நம்ம தேசத்தில நாட்டுல ஊர்ல
ஒரு பெண் ஆணையோ
ஆண் பெண்ணையோ காதல்செய்வது
எவ்வளவு அபத்தமானது.
அந்த ஒருவர்மீதுதான் தன்னோட எல்லா அன்பையும் செலுத்துவது எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்கும்னு யோசிச்சுப்பாத்தா,
அந்த இடத்தலதான் மிகப்பெரிய பித்துநிலை இருக்கிறதுனு சொல்லனும்.
அந்த பித்து அவளையோ அவனையோ விட்டுவிழகும் வரை காதல் புனிதமானத இருக்கும்.
அப்படித்தான் நம்பிட்டும் இருக்கேன்...

- ச.விவேக்