Friday 2 October 2015

சகான்மா

பிரபஞ்சம் அதன் இறகுகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது
வர்ணபூச்சியொன்றிற்கு காதுக்குள் கிச்சுகிச்சு மீட்டும் சுகத்தை
ஒரு குழந்தையின் கைவிரல் பூரணமாக்கி பூரணமாக்கி ரசிக்கிறது
ரட்சிக்கப்பட்ட ஒருத்தி
சாலையில் இறந்துகிடக்கிற ஒரு வர்ணபூச்சிக்குக்கு
உயிர்கொடுக்கிறாள்
இப்போதெல்லாம் ஆதவன்
குளிர்மையையே லோகம் பூசுகுறான்
கொலைகாரனின் கைவிரல்தான்
எறும்புக்கு தீணி போடுகிறது
ஒரு யாசகப்பார்வையின் எதிர்பார்ப்பில்
நாம் அடிமையாகும் சினேகம்
முளைத்துவருகிறது
இங்கெல்லாம் உறைந்துபோகிற நம் அகப்பிளவுகளில்
ஒரு கவிதை ஜீவிதம்ஆவதை
எதைகொண்டு நிறுத்த சகான்மாவே .....?!

No comments:

Post a Comment