Saturday 10 October 2015

அந்தரங்கம்

சிநேகம் மொய்த்து
என்னுடல் மேல்
படரத்துடிக்கும் ஜீவன்,
ஒரு ஹலோ சொல்லி
கை குழுக்குகிறது

அதி சுகந்த ப்ரணயத்தின் உடலில்
மைக்ரோ அளவிளான காமம்
ஆடைக்குமேலேயான ப்யூட்டியில்
சிதறிக்கிடக்கிறது

தேகவெளியின் இருக்கையில்
ஒரு ஜான் அளவிளான இடைவெளியில்
நீளக் கைக்குட்டையும்
ஒரு லேடீஸ் செப்பல்ஸ்ம் .

பேசும் காற்றொன்று
மூச்சுக்குழல் வழி இறங்கி
நேருக்கு நேர்
அந்தரங்கமாய் மாயையாயி
மூச்சுவாங்குகிறது

மழையின் சாரலில் குளித்த
குடைவிரித்தலுக்கு முந்தைய உடல்மாதிரி
நாணச்சுகத்தின் பொழிவில்
துளிதுளியாய் ஆகிறது தேகமேகம்

வெட்கத்தின் நரம்பெல்லாம் மூச்சிழைக்க
உயிரொன்று கேட்கிறது
பொத்தல்கள் நிறைந்த ஆடையை

மௌனத்தின் கிரீடமனிந்த
ஒரு இரவைப்போல்தான் இருக்கிறது
இருவரின் திறந்த முகமும்

கொஞ்சம் இரவைப் போர்த்தி வாழ்கிறது
என் போர்வையும்
உன் ஆடையும் ...

- ச.விவேக்.

1 comment:

  1. அருமையான கவிதை நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete